Tuesday, July 7, 2009

ஜஸ்ட் சும்மா(7/7/09)

நேத்திக்கு நியூ யோர்க் ஹிந்தி படத்தை பார்த்தேன்.simply superb. படம் பட்டைய கிளப்பிட்டு! ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துச்சு. john abrahamக்கு அழகு இருக்குன்னு தெரியும் ஆனா...இவ்வளவு சூப்பரா நடிப்பாருன்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கல! அப்பரம் நித்தின் முக்கேஷ்....oh my god.... he is brilliant!

நான் 6 பேருடன் படம் பார்க்க போனேன்.அதில் 4 பேருக்கு படம் பிடிச்சு இருந்துச்சு. எங்களுடன் வந்த என் அக்காவுக்கு தான் படம் சுத்தமா பிடிக்கல! இன்னொரு தோழிக்கும் பிடிக்கல! என்ன பொண்ணுங்களோ இவங்க..... மதியம் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். இரவில் ஒருத்தி ஸ் எம் ஸ் அனுப்பினாள். "மச்சி, john abraham என் கண்ணுக்குள்ளயே இருக்குறான்."

நான் பதில் அனுப்பினேன், "உன் கண்ணுக்குள்ளயுமா இருக்குறான்?"
_________________________________________________________________

வேலை பளு அதிகமா போச்சு! மன உளைச்சலால் கிட்டதட்ட 1.5 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது 5 நாட்களில்! என்னமோ போங்க.....
________________________________________________________________

வாமனன் படத்தில் வரும் "ஒரு தேவதை" பாடல் அருமை!!! கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோணுது.
_______________________________________________________________

இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?"

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Saturday, July 4, 2009

தண்ணிக்குள்ள மீன் அழுதா, கரைக்கொரு தகவலும் வருவதில்லை!

10.00pm

இன்னும் சந்தோஷ் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவனது கைபேசிக்கு தொடர்பு கொண்டு பார்த்தார்கள். ஆனால், அவன் எடுக்கவில்லை. வீட்டில் இருக்கும் அவனது அப்பா, சந்தோஷ் நண்பர்களின் தொடர்பு எண்ணங்களை தேடி கொண்டிருந்தார். அம்மா அழுது கொண்டிருந்தார்.

"அவன் கொஞ்ச நாளாவே சரியிலேங்க...." என்றார் அம்மா.

"அண்ணனுக்கு வேலை பிடிக்கலமா. என்கிட்ட ரெண்டு நாளுக்கு முன்னாடி சொல்லிகிட்டு இருந்துச்சு..... சொல்லும்போது ரொம்ப பாவமா இருந்துச்சு. he is really depressed. " தங்கை சோகத்துடன்.

"அவன் என்ன சின்ன பிள்ளையா? எதாச்சுன்னா வாய தொறந்து பேச வேண்டியது தானே...சும்மா....உம்முன்னா மூஞ்சி மாதிரி வச்சு இருந்தா....யாருக்கும் என்ன புரியும்?" கடிந்து கொட்டினார் அப்பா.

"ஒவ்வொரு தடவையும் அண்ணா வந்து தனக்கு வேலை பிடிக்கலைன்னு சொல்லும்போதெல்லாம் அப்படி தான் இருக்கும்...அப்படி தான் இருக்கும்னு சொன்னீங்க தவிர அண்ணனோட feelingsஎ புரிஞ்சுக்க முயற்சி பண்ணவே இல்லையே நீங்க?" தங்கை அப்பாவின் குற்ற உணர்ச்சியின் வலியை ஏற்றினாள்.

சற்று முறைத்தார் அப்பா.

அன்று மாலை 7pm.

சந்தோஷ் தன் நண்பன் ரவியுடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தான். ஆபிஸில் இருந்த சந்தோஷ்,

"ம்ம்..சொல்லுடா?"

மறுமுனையில் ரவி, "என்னடா புது வேலையில join பண்ணியிருக்க...ஒரு உற்சாகமும் இல்ல குரல...."

"பிடிக்கலடா"

"என்னடா பிடிக்கல?" ரவி அக்கறையுடன்.

"வேலை பிடிக்கல...."

"ஏண்டா?"

"ரவி, உனக்கு தான் தெரியும்ல... எனக்கு ஆரம்பத்துலேந்து இந்த படிப்பும் வேலையும் பிடிக்கல..... chartered accountantஆ தான் வரும்னு எங்கப்பா ஒத்து கால நின்னாங்க.... எனக்கு சுத்தமா பிடிக்கல?"

ரவி,"அப்பரம் உன் aim தான் என்னடா?"

"டான்ஸ்! i want to learn different forms of dance. i want to start my own dance company." ஏக்கத்துடன் சந்தோஷ்.

"இத பத்தி வீட்டுல பேசினீயா?" என்று கேட்டான் ரவி.

"இல்ல! பேச பிடிக்கல. என் வீட்டுல யாருக்கிட்டயும் நான் பேசுறது இல்ல. எனக்கு stressஆ இருக்குன்னு சொன்னா....என் அம்மாவும் அப்பாவும்... நீ என்ன சின்னபுள்ளையா... டான்ஸ கத்துகிட்டு நீ என்ன பண்ண போற... என் மகன் ஒரு கூத்தாடின்னு சொல்ல சொல்றீயான்னு கேட்குறாங்க....அவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும்....ச்சே...." மனம் நொந்து பேசினான் சந்தோஷ்.

"டேய் விடுடா..... கொஞ்ச நாள்ல சரியா போயிடும்!"

"நான் வாழ்ந்த இந்த 25 வருஷமா அப்படி தான் நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... வருஷம் போக போக.... சோகம் தான் மிஞ்சுது.... முடியலடா...." தழுதழுத்த சந்தோஷ்.

"டேய்.... என்னடா நீ.... நல்ல நக்கல் அடிச்சு...எல்லாரையும் கலாய்ச்சு...பேசிகிட்டு இருக்குற நீ...இப்படி மனசு உடைஞ்சு பேசாத டா....உன்னைய இப்படி பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. cheer up!" ஆறுதல் பேசினான்.

தொடர்ந்தான் ரவி, "நான் வேணும்னா அங்கிள்கிட்ட பேசிபாக்கவா?"

சந்தோஷ், "வேண்டாம்.... நீ பேசினா...எங்கப்பா...ஓ கூட்டாளியோட கூட்டு சேந்துகிட்டு பேச வைக்குறீயா? என்ன ரவுடியா நீ அப்படி இப்படின்னு தேவையில்லாம பேசுவாரு....."

"ஐயோ... அப்பரம் எப்படி டா? டேய்... உனக்கு கல்யாணம் ஆனா பிறகு... உன் ambitionஎ தொடரலாமே?"

"எப்படிடா முடியும்? வரபோற பொண்ணுகிட்ட நான் கல்யாணத்துக்கு அப்பரம் வேலைய விட்டுடுவேன் டான்ஸரா போவேன்னு எப்படி சொல்ல முடியும்? நல்லா இருக்காதுடா. என் வாழ்க்கையே நான் முழுசா ஒரு நாள்கூட வாழ்ந்தது கிடையாது. இதுல இன்னொருத்தியா.....அதெல்லாம் நடக்காத காரியம்." என்றான் சந்தோஷ்.

ரவி, "டேய் அப்படி சொல்லாதடா..... வாழ்க்கையில முத பாதி கஷ்டம் படுறவங்க, இரண்டாவது பாதில நிம்மதியா இருப்பாங்க. உன்னைய புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பொண்ணு வருவா டா?"

சந்தோஷ் வருத்தமாய், "சினிமாவுல மட்டும் தான் அதலாம் நடக்கும்."

ரவி, "இதுக்கு வேற வழியே கிடையாதா?"

சந்தோஷ், "மரணம் தான் ஒரே வழி."

ஆச்சிரியம் அடைந்தான் ரவி. "டேய், just shut up man! சும்மா இப்படிலாம் பேசாத... நீ இப்ப வீட்டுக்குபோய் நல்லா படுத்து தூங்கு. கண்டத பத்தி நினைக்காத. சரியா?"

ம்ம்... என்றபடி ஃபோனை வைத்தான் சந்தோஷ். சந்தோஷின் குரலும் அவன் பேசிய கடைசி வார்த்தையும் ரவிக்கு நெருடலாய் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு ஸ் எம் ஸ் அனுப்பினான் ரவி, "hey dude, are you okay? do you want to meet up somewhere?"

உடனே பதில் அளித்தான் சந்தோஷ், "i am ok da. am really tired and stressed out. office work is really piling up. i need rest. i am back home. will call you soon. thanks da."

இப்படி பதில் அளித்து கொண்டிருந்த சந்தோஷ் உட்கார்ந்திருந்த இடம்- பீச்!

மணி 9.30 pm.

கடல் அலைகள் அவனை வா வா என்று அழைப்பதுபோல் உணர்ந்தான். கைபேசி அலறியது. displayயில் வீட்டு நம்பர் தெரிந்தது. அவன் எடுக்கவில்லை.

அவன் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்களை நினைத்துபார்த்தான். நான்காம் வகுப்பில் கணக்கு வராததால் பக்கத்துவீட்டு பையனோட ஓப்பிட்டு பார்த்து அவர் அப்பா சொன்ன வார்த்தை, "அவனோட மூத்தரத்த குடி!" ஞாபகம் வந்தது.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் வெளியே சென்றபோது தெரியாமல் காலணி கிழிந்துவிட்டது. அதற்கு அவன் அப்பா, "நீ வாழ்க்கைல உருபுட மாட்டே.. ஒரு செப்பல கூட சரியா போட தெரியுல." என்று அந்த கிழிந்த செருப்பாலே தெருவில் அடித்தார்.

காலேஜ் படிக்கும்போது cultural show practice முடிந்து தாமதாய் வீட்டிற்கு வந்தபோது "இவனுக்கு சாப்பாடு போடாத. அப்ப தான் சூ** கொழுப்பு குறையும்."என்றார் அவன் அப்பா.

சந்தோஷிற்கு இஷ்டமான காரியத்தில் அவனை ஈடுபட ஊக்கம் அளித்ததே கிடையாது. விரக்தி, நிம்மதியில்லாத உறக்கம், வீட்டில் பேசுவதை குறைத்தது, இப்படி அவன் வாழ்க்கை ஒரு திசையில் திசைமாறி சென்றதை எண்ணி பீச் மணலில்

"i hate my life.i want to die." என்று கிறுக்கி கொண்டிருந்தான்.

இரவு மணி 10.00

வாழ்க்கையை முடித்துகொள்ள முடிவு எடுத்தான். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது கால்கள் நனைந்தன. நடந்தான். முட்டி வரை தண்ணீர் வந்தது. நடந்தான். மரணத்தின் வாசல் கதவை தட்டினான்.

இரவு மணி 1045.

சந்தோஷ் காணவில்லை என்று போலிஸில் ரீப்போர்ட் கொடுக்க சென்றனர் அவனது பெற்றோர்களும் தங்கையும். போலிஸுக்கு ஒரு ஃபோன் வந்தது.

போலீஸ், "இதோ வரேன்!" என்றவர் சந்தோஷ் குடும்பத்தினரிடம், "சார், ஒரு dead body கிடைச்சுருக்கு. ஒரு வேளை...."

என்று முடிப்பதற்குள் சந்தோஷின் அம்மா கதறி அழ ஆரம்பித்தாள். தங்கைக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.

"அவன் ஒரு சனியன் பிடிச்சவன் சார், எங்களுக்கு நிம்மதியே கொடுக்க மாட்டான்." என்று தலையில் அடித்து கொண்டார் அவன் அப்பா.

இரவு மணி 11.00

சந்தோஷுக்கு வாழ பிடிக்கவில்லை என்றால் அவனுக்கு மரணம்கூட பிடிக்கவில்லை. முழுதாய் நனைந்தவன் ஈரத்துடன் மணலில் உட்கார்ந்து கிறுக்கினான், "i hate to live and i hate to die!"

*முற்றும்*

(பிள்ளைகளுக்கு நல்லது பண்றேன் நல்லது பண்றேன் என்று அவர்களது வாழ்க்கையை கெடுத்த, கெடுத்து கொண்டிருக்கும், கெடுக்க போகும் பெற்றோர்களே, உஷார்ர்ர்ர்ர்!)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, June 28, 2009

ஜஸ்ட் சும்மா(28/6/09)

ரெண்டு மாசம் லீவு முடிஞ்சு போச்சு. நாளைக்கு காலேஜ் மறுபடியும் ஆரம்பிக்க போகுது(என் தலைவலி மருந்து எங்கே?) எனக்கு அழுகாச்சியா வருது! ஐயோ காலேஜ் lectures, assignments.... இத நினைச்சாலே மனம் முதல் வயிறு வரை கலக்குகிறது!:(
-----------------------------------------------------------------------------------------
நான் keyboard 1st grade தேர்வு எழுதினேன். 1st classல் பாஸ் பண்ணிட்டேன். கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமா போச்சு. 74/100 மார்க். ஒரே ஒரு மார்க் வாங்கி இருந்தால், distinction வாங்கியிருக்கலாம்! என் கீபோர்ட் குருவுக்கு நன்றி:)
-----------------------------------------------------------------------------------------

தடை போட யாருமில்ல தொடர்கதை எனக்கு நல்ல அனுபவத்தை கற்று கொடுத்தது. அதாவது காமெடியாக கதையை நகர்த்தி செல்வது ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்! அவசரத்தில் முடித்ததால் எனக்கே முடிவு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோன்னு இருந்துச்சு! ஆனால் சில மாதங்கள் கழித்து கண்டிப்பா சீசன் 3 வரும்! ஹிஹி...:)
---------------------------------------------------------------------------------------

வரும் ஜூலை மாதம், நிறைய படங்கள் வெளிவருபோகின்றன. அவை, அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் ஆயிரத்தில் ஒருவன்! ரெண்டுமே பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Saturday, June 27, 2009

நாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

நாடோடிகள்- ரொம்ப எதிர்பார்த்த படம். ஏதோ ஒரு வகையில் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது இப்படம்.

நல்ல கதை, நெத்தியடியான கருத்து. நண்பரின் காதலை ஜெயிக்க வைக்க போராடும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்துள்ள படம். ஆனால், திரைக்கதை ரொம்ப மெதுவாய் சென்று, ஒரு இடத்தில் வேறு எங்கோ சென்று, மறுபடியும் அதே trackல் வந்து, சுத்தி....பிறகு கதையை முடித்து இருக்கிறார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம். எடிட்டர் சார், கொஞ்சம் வெட்டி இருக்க கூடாதா?

சுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ? பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.

நடிப்பு பொருத்தவரை, சசிகுமார் சுப்பரமணிபுரம் படத்தில் வந்தது போலவே தெரிகிறார். உடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில்? இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:) நடனம் சுத்தமாக வரவில்லை சசிக்கு. இருந்தாலும் நல்ல முயற்சி. body language, voice modulation ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்!

கல்லூரி படத்தில் நடித்த பரணி இப்படத்தில் இன்னும் அதிகமாய் நடிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரை பயன்படுத்தியிருக்கிறார். சத்தமாக பேசும்போது வார்த்தைகள் சரியாக விளங்கவில்லை. :( கல்லூரியில் நடித்த மாதிரியே இருந்துச்சு.

கஞ்சா கருப்பு காமெடிக்கு உதவி செஞ்சு இருக்கிறார். அவ்வளவு தான்! சொல்லி கொள்ளும் அளவு அப்படி ஒன்னுமில்ல.

என்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்!

படத்தில் வந்த ஹீரோயின்கள்: சசிக்கு வந்த ஜோடிக்கு நல்ல நடிப்பு. அழுவும்போதும், சிரிக்கும்போது, காமெடி செய்யும்போது சிறப்பாய் செய்துள்ளார். சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார் சமுத்தரக்கனி! இந்த இடத்துல உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!

வசனங்கள்- நெத்தியடியான வசனங்கள்!

அரசியல்வாதியாக வரும் நபர் அடிக்கும் லூட்டி ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
ஒரு காட்சியில் கிணத்தில் குதித்து சாக போகிவிடுவான் சசியின் நண்பன் சரவணன். சசியும் மற்ற நண்பர்களும் சரவணனை மடியில் போட்டு "சரவணா சரவணா" என்று கதறுவார்கள்.

அப்போது அரசியல்வாதி தன் ஆட்களுடன் வந்து சரவணாவை தலைகீழ் நிற்க வைத்து முதுகில் அடித்து அவனை ஒரு குலுக்கு குலுக்கி காப்பாற்றிவிடுவார்கள். அதற்கு அப்பரம் அரசியல்வாதி சொல்வார், "இப்படி பண்ணனும். சும்மா சரவணா சரவணான்னு சொன்னா புழைச்சுடுவானா?"

செம்ம காமெடி பஞ்!

ஆங்காங்கே இயக்குனர் முன்பு எடுத்த அரசி சீரியலின் காட்சிகள் போல் சில தென்பட்டன! :)
கிளைமெக்ஸ் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாமோ!

எனிவே,
நாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, June 24, 2009

தடை போட யாருமில்ல-6

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

"நீங்களாம் பிரச்சனைய பாக்கெட்டுக்குள்ளே வச்சு இருப்பீங்களா? என்ன கொடுமை ஐயப்பா இது!" என்று வானத்தை பார்த்தாள் கலா.

சுதா பரபரப்பாக தேடி கொண்டிருந்தாள் தனது கைபேசியை. "gone! am dead!" என்றாள் சுதா.

"வீட்டுல சங்கு தான் எனக்கு." சுதா சலித்து கொண்டாள்.

"all the best!" என்றாள் விஜி சுதாவை நக்கல் அடிக்க.

"விடு விடு..... அந்த வெத்தல பெட்டி டப்பா மாதிரி இருக்குற ஃபோன் போனா போகுது புதுசா வாங்கிகலாம். " கிண்டல் அடித்தாள் கலா.

"அதுல என் sweetheart surya படமெல்லாம் இருக்குதுய்யா!" சுதா உருகினாள்.

"அடி பாவி.... உங்க அக்கா முதல் மாச சம்பளத்துல வாங்கி கொடுத்த ஃபோன் போச்சேன்னு கவலைப்படாம.....சூர்யா படம் போச்சேன்னு கவலைப்படுற பாத்தீயா? உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால...." என்று கலா வாக்கியத்தை முடிக்க முற்பட்டபோது உடனே சசி,

"மோசமான தமிழ்படம் கூட நல்லா ஓடுது! அது தானே சொல்ல வந்தே. பாஸு பாஸுன்னு build-up கொடுப்பீயே....இந்த டயலாக்க மட்டும் மாத்தவே மாட்டீயா?"

"shut up man! உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால தான் பன்றி காய்ச்சல் வருதுன்னு சொல்ல வந்தேன்...." என்றாள் கலா!

விஜி, "வெரி குட் சமாளிfications!" சிரித்தாள்.

ஒரு வழியாய் வீட்டிற்குச் சென்றனர் அனைவரும். சனிக்கிழமையும் வந்தது. சசிக்கு வெட்கம் கலந்த பயமும் வந்தது. சித்தார்த்தை பார்க்க தயாரானாள். மற்ற மூவரையும் அவள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் சந்தித்தாள். அவர்கள் சசியின் அலங்காரத்தை பார்த்து,

"மருமகளே மருமகளே வா வா...." என்று கிண்டல் அடித்து பாடினர்.

சசி அவர்கள் பாடுவதை பொருட்படுத்தாமல், " கேர்ள்ஸ்...எல்லாம் நல்லா இருக்கா...லிப்ஸ்டிக் ஓகேவா?" என்று கையிலும் கழுத்திலும் போட்டிருந்த அணிகலன்களை தொட்டு பார்த்து சரி செய்து கொண்டாள்.

"நான் பாத்து வளந்த குழந்தை இப்போ என்னையவே சரி பாக்க சொல்லுது?" என்று பாட்டி போல் பெருமூச்சு விட்டாள் கலா.

"என்ன கலா, சசி dating போறான்னு உனக்கு பொறாமையா? is fire burning in your stomach?" சுதா கேட்டாள்.

"ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா...எந்த ஆஞ்ஜநயா பக்தையும் dating போக மாட்டாள். அதுவும் இல்லாமல் நான் ரொம்ப decent familyய சேந்து பொண்ணு...இப்படிலாம் பண்ண மாட்டேன்." சிரித்து கொண்டே கலா பதில் சொன்னாள்.

"அப்போ சசி கெட்ட பொண்ணா?" விஜி கேட்டாள்.

"ஐயோ சசி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு. நாட்டிற்கும் வீட்டிற்கும் இப்படிப்பட்ட பொண்ணு இருந்தா போதும்...கலாச்சாரம் ஓகோன்னு போயிடும்." என்றாள் கலா சிரித்தவாறு.

"ப்ளீஸ் மேன்....சசிய கிண்டல் பண்ணாதீங்க...அப்பரம் குழந்தை அழுதிட போகுது!" சுதா சசிக்கு ஆதரவாய் பேசினாள். பேருந்து வந்தது சசியும் புறப்பட்டு சென்றாள்.

"போறாளே பொண்ணு தாயி...." என்று பாரதிராஜா பட பாடலை பாடிய படி கலாவும் மற்றவர்களும் அவர்கள்தம் வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் காலையில் அனைவரும் சுதாவின் வீட்டில் ஆஜரானார்கள். சுதாவின் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள், ஆனால் சசி மட்டும் இன்னும் வரவில்லை.

"என்ன மேன் இந்த சசி இவ்வளவு லேட் பண்ணுறா? நேத்திக்கு என்ன ஆனுச்சுன்னு கேட்க எவ்வளவு interestingஆ இருக்குறோம்..." கலா கூறினாள்.

"ஆமா ஆமா...பச்சை தண்ணிகூட பல்லுல படாம இருக்குறா கலா, பாவம்!" என்றாள் விஜி.

"ஹலோ எனக்கே வா!" என்றாள் கலா அப்போது சசி சுதாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன சசி....ரொம்ப tiredஆ இருக்கே?" என்று 'tired' என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினாள் கலா. விஜியும் சுதாவும் சிரித்தனர்.

"shut up you woman!" கத்தினாள் சசி.

"சரி, சொல்லு என்ன ஆச்சு நேத்திக்கு....எப்படி இருந்துச்சு dating!" கேட்டாள் சுதா ஆர்வத்தோடு.

"dating இல்ல. outing!" என்று சுதா சொன்னதை திருத்தினாள் சசி.

சுதா, "ஐயோ அதவிடு....எப்படி பேசினான் சித்தார்த்?"

விஜி, "any touching touching?"

கலா, "no no.... i think they did something something." கைகளை அகல விரித்து சத்தம் போட்டு சிரித்தாள்.

சசிக்கு கோபம் வர, "வாய மூடுங்க டி.... he is a gem. he is such a gentleman. உங்கள மாதிரிலாம் இல்ல. அவரு ரொம்ப decent!"

"ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குதே!" என்று வேடிக்கையாய் நெஞ்சில் கை வைத்து சாய்ந்தாள் கலா.

சுதா, "ஓய்.... எங்களையே நீ கலாய்க்கிறீயா?"

கலா, "ஒரு ராத்திரில சசி இப்படி மாறிடுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல....போங்கய்யா...நான் Afghanistanக்கு migrate ஆகிட போறேன்...இந்த கொடுமையலாம் என்னால தாங்க முடியாது!"

விஜி, "சசி, என்ன பண்ணீங்க நேத்து? billiards விளையாட கத்து கொடுத்தாரா?"

கலா, "இல்ல இல்ல....அவரு இவ்வளவு பெரிய decent உத்தமரு. சசி ஒரு உத்தமி. ரெண்டு பேரும் உலக பொருளாதாரம், தீவிரவாதம், தண்ணீர் பிரச்சனை, ozone layer ஓட்டை விழாம எப்படி காப்பாத்தலாம் அப்படின்னு அறிவுபூர்வமாண விஷயங்கள மட்டும் தான் பேசி இருந்திருப்பாங்க.... அப்படி தானே சசி?"

ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருந்தாள் சசி.

விஜி, "என்ன சசி, ஒன்னுமே சொல்லாம இருக்குற. கலா உன்னைய இப்படி ஓட்டுறா?"

சசி, "இருக்கட்டும் இருக்கட்டும். அடி படுற கல்லு தான் சிற்பமாகும்."

உடனே கலா, "பாத்து டி கர்பமாகிட போது!"

கலாவின் timing comedyயை கேட்டு அனைவரும் சிரித்தனர். சசி பக்கத்தில் இருந்த தலையணையை கலாவின் முகத்தில் அமுக்கினாள் விளையாட்டாய்.

அச்சமயம் சுதாவின் வீட்டு ஃபோன் ஒலி எழுப்பியது. அறையிலிருந்த மேசையில் ஃபோன் இருந்தது. அதை speaker modeல் போட்டாள்.

"ஹாலோ, யாரு பேசுறது?" என்றாள் சுதா.

"ஹாலோ....இந்த moblie no...." என்றவர் காணாமல் போன சுதாவின் கைபேசி எண்களை சொன்னார்.

"ஆமா அது என்னோட ஃபோன் தான். காணாம போச்சு கொஞ்ச நாளைக்கு முன்னாடி....எங்க கிடைச்சது? எப்படி?" தன் கைபேசி மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் சுதா. விளையாடி கொண்டிருந்த மற்றவர்கள் தொலைபேசி அருகே வந்தனர்.

"ஓ....இன்னிக்கு படம் பார்க்க போன போது, என் seat கீழே இருந்துச்சு.... i think you dropped it. ஃபோன்ல....home அப்படின்னு ஒரு contact நம்பர் இருந்துச்சு...சோ...அதான் ஃபோன் பண்ணி பாத்தேன். உங்க வீட்டு address சொன்னீங்கன்னா....நான் வந்து கொடுத்துடுறேன்...." என்றார் அவர்.

"ஓ...இல்ல பரவாயில்ல....நான் வந்து வாங்கிகிறேன்..." என்றாள் சுதா.

"இல்லங்க பரவாயில்ல.... நான் வீட்டுக்கு போற வழில வந்து கொடுத்துடுறேன்..." என்றார். முகவரியை கொடுத்தபிறகு அவர்,

"சாரி...உங்க பெயரு?"

"ஐ எம் சுதா. நீங்க?" என்றாள்.

"மை நேம் இஸ் ரவி!" என்றதும் சுதா, "ரவியா????"

கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.

அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.

மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"

"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.

கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.

*முற்றும்*

(இத்துடன் இந்த sequel 2/season 2 முடிச்சுட்டு. ஐயப்பா சாமி...தொடர்கதை எழுதுறது ரொம்ப கஷ்டம்ய்யா! உஷ்ஷ்ஷ்......... ஆபிள் ஜுஸ் ப்ளீஸ்.)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, June 23, 2009

தடை போட யாருமில்ல- 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

"ஓ...நோ!!" கத்தினாள் சுதா. அவள் சத்தம் போட்டதை கேட்டு விஜியும் கலாவும் தலைதெறிக்க ஓடி வந்தனர். நொறுங்கிய கண்ணாடி துண்டுகளை பார்த்தனர் நால்வரும். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன் விலையை பார்த்தனர். சசிக்கு மயக்கம் வந்துவிட்டது.

விஜி, "ஒரு restaurant இருந்தாலும் பரவாயில்ல...காசு இல்லன்னா மாவு ஆட்ட சொல்வாங்க.....இங்க என்னய்யா பண்ண சொல்வாங்க?"

கலா, " இந்த கடை முதலாளி முன்னாடி நின்னு record dance ஆட சொல்வாங்க...எனக்கு வாய்ல நல்லா வருது. இந்த கழுதைங்க கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா போக வேண்டியது தானே? ரெண்டு வயசு பிள்ளைங்கன்னு நினைப்பு இதுங்களுக்கு!" என்று சுதாவையும் சசியையும் கிண்டல் அடித்தாள். மற்ற மூவரும் பயத்தால் நடுங்க, கலா மட்டும் எப்போதும் போலவே கூலாக கலயாத்து கொண்டிருந்தாள்.

"ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ?" என்று சிரித்தாள் கலா.

"be serious கலா...எனக்கு பயமா இருக்கு!" என்று அழுதாள் சசி.

கடையின் நிர்வாகி ஓடி வந்தார். நால்வரையும் பார்த்தார்.

"இந்த கண்ணாடி பீஸ் என்ன விலை தெரியுமா?" என்று நிர்வாகிக்கு கோபம் வந்தது.

"excuse me mr....." என்ற கலா, அவர் சட்டை பையிலிருந்த பெயர் அட்டையை பார்த்து,

"mr kanthaa saamy..." என கந்தசாமி என்னும் பெயரை பிரிட்டீஷ் இளவரசி எவ்வாறு பேசுவாங்களோ அவ்வாறு பேசினாள்.

ஆங்கில கலந்த தமிழில், கலா "எங்க daddy யாரு தெரியுமா? mr chandragopal தெரியுமா?" என்றாள்.

அவள் பேசிய விதமும் விரல்களை நீட்டி பேசிய விதமும் நிர்வாகியை கொஞ்சம் பயத்தால் ஆட வைத்தது.

"மிஸ்டர் சந்திர கோபால்... தெரியாதே?" என்றார்.

"அப்போ நல்லதா போச்சு...." முணுமுணுத்தாள் கலா.

"அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா, you damn it!" கண்ணாடி துண்டுகளை மேலும் உதைத்தாள்.

கலாவின் தசாவதாரத்தை கண்டு ரசித்து கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

"ஆறு அடி இருப்பாரா?" என்றார் நிர்வாகி.

"ஏய் ஏய்....you....kidding with me? you....." என்று கோபம் வருவதுபோல் நடித்தவள் தனது கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்தாள். அது ஏதோ ஒரு நாட்டிற்கு connect ஆனது.

"எங்க daddy நினைச்சாருன்னா, இந்த மாதிரி 100 கடை வாங்க முடியும்! mind it!" என்று நிர்வாகியிடம் பேசிவிட்டு கைபேசியை தன் காதில் வைத்தாள்.

"daddy, you know what has happened...." என்றவள் ரொம்ப நேரம் புலம்பி தீர்த்தாள். இதை பார்த்து கொண்டிருந்த நிர்வாகி உண்மை என்று பயந்துவிட்டான். பேசி முடித்தவள் நிர்வாகியிடம் கைபேசியை நீட்டி,

"இந்த மேன்...my dad wants to talk to you."

கைகள் சற்று நடுங்கியவாறு நிர்வாகி, "ஹாலோ சார்....." என்று இழுத்தான்.
உடனே அவன் கலாவிடம்,

"அவர் என்ன சொல்றாருன்னு தெரியல்ல....எந்த ஊர்ல இருக்காரு?"

கலா, "he is talking from dubai."

கலா கைபேசியை பிடுங்கி தன் காதில் மீண்டும் வைத்து பேசினாள், "ok dad...ok..sure..no problem...it is ok dad. i will take care. no no...you need not come here!"

பேசி முடித்தவள் நிர்வாகியிடம், "இங்க பாரு மேன்...என் அப்பாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு...இங்க உடனே helicopterல வரேன்னு சொன்னாரு. நான் தான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். இந்த கண்ணாடி பீசுக்கு நான் pay பண்ணுறேன். do you accept credit card?"

"நோ மேடம். system out of order. so cash only."

"damn it....என்ன கடை வச்சு நடத்துற...." என்றவள் மறுபடியும் கைபேசியை எடுத்து பேசினாள். அப்போது தூரத்தில் இரண்டு துபாய் ஷேக்குகள் கடை வீதியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

கலா நிர்வாகியிடம், "பணத்த உடனே கொண்டு வர சொல்லிட்டேன். என் அப்பாவோட assistants தான் அவங்க..." என்றவள் அந்த இரண்டு ஷேக்குகளை பார்த்து கை நீட்டி காட்டினாள்.

"அவங்ககிட்ட பணத்த வாங்கிக்கோ மேன்....." என்றவள் நைஸா நால்வரையும் கூட்டி கொண்டு வெளியே வந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தவர்கள் பின்னர் ஓட ஆரம்பித்தனர். ரொம்ப தூரம் ஓடினர். கால் வலி ஏற்பட ஒரு juice கடையில் juice வாங்கி கொண்டனர்.

"எனக்கு ஆபிள் ஜுஸ் வேணும்..." என்றாள் சுதா.

"இவ கெட்ட கேட்டுக்கு ஆபிள் ஜுஸா..." என்று கையில் இருந்த பையை கொண்டு சுதாவின் மண்டையில் அடித்தாள்.

"யாரு மேன் துபாய்லேந்து பேசினா...உனக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம் மச்சி." என்றாள் விஜி.

"யாருக்கு தெரியும்...ஏதோ ஒரு நம்பர்...அது எங்கேயோ போச்சு. arabic language மாதிரி பேசினாங்க....அதான் துபாய்ன்னு சொல்லிட்டேன். வாழ்க துபாய்!" என்றால் கலா ஜுஸை குடித்து கொண்டே.

"thanks கலா! நீ இல்லேன்னா...." என்றாள் சசி.

"கண்டிப்பா record dance தான் ஆடி இருக்கோனும் ...." என்று நக்கல் அடித்தாள் கலா.

மற்றவர்கள் சிரித்து பேசிகொண்டிருந்த வேளை சுதா தனது பையில் ஏதோ ஒன்றை தீவிரமாக தேடி கொண்டிருந்தாள். திடீரென்று கத்த ஆரம்பித்தாள், "oh shit... i lost my handphone!!!"

(தொடரும்...)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, June 21, 2009

தடை போட யாருமில்ல- 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

கண்ணாடி கடைக்குள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு contact lensயை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். சசி, "ஏண்டி இதலாம். இந்த கண்ணாடியே போட்டு போனால் என்ன?"

சுதா, "சும்மா இரு மேன். contact lens gives you a glamorous look."

சசி, "அடியே நான் என்ன நமீதாவுக்கு போட்டியா போக போறேன். எனக்கு என்னமோ, நீங்களாம் என்னைய வச்சு காமெடி பண்ணுற மாதிரியே இருக்கு."

சசி சொன்னதை கலா கேட்டுவிட்டாள். கையிலிருந்தவற்றை போட்டுவிட்டு கலா,

"சரி வாங்க...போவோம். சசியே பாத்துகிட்டும்." என்றவுடன் சசி,

"ஏய் ஏய்...சரி சரி...." என்று பவ்யிமாக பதுங்கி போனாள்.

விஜி சிரித்து கொண்டே," அப்படி வா வழிக்கு."

சசி, "ஐஸ்வர்யா ராய் கண்ணு கலரு பச்சை தானே. பச்சை கலரு லென்ஸ் எடுக்கலாமா?" என்றாள்.அவள் பேசியதை கேட்டு மற்ற மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

கலா, "ஒரு படத்துல சத்யராஜ் சொல்வாரு நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ எஞ்ஜினியராவோ ஆகிடுவான்னு. அதுக்கு கவுண்டமணி, அது எப்படி மாப்பிள்ள கொஞ்சம்கூட வெட்கப்படமா பேசிட்டேன்னு. அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது சசி. அது எப்படி உன்னையும் ஐஸ்வர்யாவையும் compare பண்ணி பேசுற?"

அவர்கள் சசிக்கு ஒரு colourless lensயை தேர்ந்தெடுத்தனர்.

சுதா, "நெக்ஸ்ட் என்ன?"

விஜி, "ஆள் பாதி ஆடை பாதி!"

கலா, "அப்போ சசி பாதி டிரஸோட தான் போகுமா?"

சசி, "அடியே!"

நால்வரும் சாரா பேஷன் கடைக்குள் சென்றனர். சசி மூவரையும் தடுத்து நிறுத்தி ஒரு முக்கியமான கேள்வியை கேட்டாள்,

"ஏய்....நான் இதையெல்லாம் வீட்டுக்கு எடுத்துகிட்டு போனா....ஏன் இப்போ இதையெல்லாம் வாங்கினேன்னு கேட்டாங்ளா என்ன சொல்ல?"

இப்படி ஒரு கேள்வியை கேட்டவுடன் சுதாவும் விஜியும் ஆச்சிரியத்தில் நின்றனர். யாரும் இதை யோசிக்கவில்லையே!

சசிக்கு பயம் கவிகொண்டது, முகத்தில் அச்சம் படர, "என்ன மேன் செய்யுறது?" படபடப்புடன் கேட்டாள்.

கலா, "இந்த கலா இருக்க பயம் ஏன்? நம்ம classல படிக்குறான்ல செந்தில். அவனோட wedding receptionக்கு தான் இந்த புது டிரஸ்ன்னு சொல்லு."

சுதா, "எப்ப டி அவனுக்கு கல்யாணம் ஆனுச்சு?"

கலா, "பொய் மச்சி, பொய்! ஹாஹா...."

விஜி, "நம்ம போதைக்கு மத்தவன் ஊறுகாயா? ம்ம்...நடத்துவோம் நடத்துவோம்!"

கடைக்குள் நின்ற ஒரு பொம்மை போட்டிருந்த உடையை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் சுதா. விஜி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாள். சுதா,

"இந்த பொம்மை போட்டிருக்கிற டிரஸ் மாதிரி நம்ம சசிக்கு வாங்கி கொடுப்போமா?"

கலா, "அதுக்கு ஏண்டி காசு கொடுத்து வாங்கனும்? சசி குளிச்சிட்டு துண்ட கட்டிகிட்டு அப்படியே போ சொல்லு. ஒரு செலவும் இல்லாமல் போயிடும்!"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசி கலாவின் கையை கிள்ளினாள்.

“first date போகும்போது ரொம்ப revealing clothes போடகூடாது. அதே நேரத்துல இழுத்து போத்திட்டும் போககூடாது. நல்ல பொண்ணு மாதிரி இருக்ககூடாது, அதே நேரத்துல கெட்ட பொண்ணு மாதிரியும் இருக்ககூடாது….” கலா தனக்குள் ஒளிந்திருந்த ஸ் ஜெ சூர்யாவை தட்டி எழுப்பினாள்.

“ஓ மை காட்….என்ன மேன் சொல்ல வர நீ?” சுதாவின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

“எல்லாம் பசங்க சைக்காலஜி. அவங்க மனசு நல்லா இருந்தாலும். அவங்க கண்ணு அலைபாயும். சோ, அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் இருக்கனும்.” கலா விளக்கினாள்.

“எப்படி?” விஜி கேட்டாள். கலா பேசுவது பிடிக்காதவள் போல் சசி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாலும், கலா என்ன சொல்கிறாள் என்பதை கூர்ந்து கவனித்தாள்.

“no spaghetti , no tube top! short-sleeve dress will be the best. கொஞ்ச low neckஆ இருந்தா போதும்!” என்று கண்களை சிமிட்டினாள் கலா. காலில் விழாத குறையா சுதா,

“தலிவா, கலக்குற!”

தேவையான பொருட்களை வாங்கி கொண்டனர். சனிக்கிழமை அன்று தான் வாங்கிய புதிய உடையை போட்டு எப்படி இருப்போம் என்று கற்பனையில் மிதந்தாள் சசி. புதிய உடையில் நடந்து போவதுபோல் கற்பனை செய்தாள், பின்னாடி இளையராஜா பின்னனி இசையுடன்.

தன்னை கிண்டல் செய்வார்கள் என்றும் நினைக்காமல் வெகுளித்தனமாய், “ஏய் கேள்ர்ஸ்….இவ்வளவு தானா?” என்றாள். மற்ற மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர்.

“வேற என்ன வேணும் செல்லம்?” கலா சசியின் தோளில் கை போட்டாள்.

“இந்த waxing, threading….இதெல்லாம் இல்லையா?” சசி தயக்கத்துடன்.

கலா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். கலா, “சசி, தேரிட்ட மச்சி!”

ஒரு அழகு நிலையத்திற்குள் சென்றனர். அங்கே நின்று கொண்டிருந்தார் ஒரு ஆண்ட்டி. விஜி, “ஆண்ட்டி, இந்த பொண்ணுக்கு…..” என்று ஆரம்பித்தவள் செய்ய வேண்டிய விஷயங்களை விளக்கினாள்.

“ஒரு குரங்க எப்படி கிளியா மாத்துறீங்கன்னு நான் பாக்குறேன்.” என்றாள் கலா. உள்ளே சென்ற சசி வெளியே வந்தாள் ஒரு மணி நேரம் கழித்து.

மற்ற மூவரும், “வாவ்!!!!” என்றனர்.

“என்னை கொஞ்சம் மாற்றி...” என்று பாட தொடங்கினாள் விஜி சசியை பார்த்து. சசிக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால், எல்லாரும் பூரிப்பு அடையும் விதத்தில் தான் இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.

விஜி தொடர்ந்தாள், "இப்படியே போனே, உன் குடும்பத்துக்கே உன்னைய அடையாளம் தெரியாம போயிடும்! ஹாஹா..."

பிறகு, நால்வரும் வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தபோது, சுதா கத்தினாள்,

"ஏய் பேப்ஸ்..we forget one important thing!!"

என்ன என்பது போல் மற்றவர்கள் சுதாவை பார்த்தனர்.

"make-up items....eyeliner, lipstick...இதெல்லாம் இருக்கா சசி உன்கிட்ட?" என்றாள் சுதா.

"இருக்கு... சின்ன வயசுல fancy dress competitionக்காக வாங்கி வச்சது" என்றாள் சசி.

" ஏன் உங்க பாட்டி சின்ன வயசா இருந்தபோ வாங்கி வச்சதுன்னு சொல்ல வேண்டியது தானே....வா போய் புதுசா வாங்கலாம்!" என்றாள் சுதா.

"வேண்டாம்ய்யா...i can manage with the ones i have at home. if not i can borrow from you guys." பதில் அளித்தாள் சசி.

"இங்க பாரு...இது என்ன பக்கத்து வீட்டில காபி தூள் வாங்குற மாதிரி நினைச்சீயா? nothing doing....வா மேன்..." என்று வலுகட்டாயமாக இழுத்து கொண்டு சென்றாள் சுதா சசியை.

சசி, " ஐயோ ஏண்டி....விடு... நான் வரேன்." என்று உள்ளே நடந்தாள். விஜியும் கலாவும் சாவகாசமாக நடந்து வந்தனர். சுதாவும் சசியும் முதலில் கடைக்குள் சென்றனர். ஆனால் கடையின் நுழைவாயில் சிறியதாக இருந்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிகொண்டு விளையாடிய படியே நடந்தனர்.

அவர்கள் பக்கத்தில் ஒரு கண்ணாடி பூ தொட்டி இருந்தது 3 அடி உயரத்தில். சுதாவும் சசியும் அதை கவனிக்கவில்லை. சுதாவின் கை அதை லேசாக தான் தொட்டது.

விளையாடிய விளையாட்டு வினையாய் போனது! கண்ணாடி பூ தொட்டி தொப்பென்று விழுந்து நொறுங்கியது.

(பகுதி 5)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

இந்த மானக்கெட்ட பொழப்பு தேவையா?

விஜய் டீவி அவார்ட்ஸ் நிகழ்ச்சிய பார்த்தபிறகு....சாரி சாரி, அந்த சூர்யா family function நிகழ்ச்சியை பார்த்தபிறகு எனக்கு தோன்றியது தான் இப்பதிவின் தலைப்பு!

உளறல்கள்:

அது எப்படி, தமிழ் சினிமாக்காரர்கள் உளறுவதில் இப்படி கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கமல் முதல் மனோரமா வரை எல்லாரும் ஏதோ சம்மந்தம் இல்லாமல் பேசியது சிப்பா இருந்துச்சு! அதுவும் சிவாகுமார் பேசியது நகைச்சுவையிலும் நகைச்சுவை!! அண்ணன் பையனுக்காக கமல் தான் சூர்யாவுக்காக விருதை விட்டுகொடுத்தது என்று கூறுகையில்......... என்னால முடியல்ல!!!

மடத்தனம்:

காமெடி என்ற பெயரில் பார்த்திபன் சொன்னது. ஐயோ...... மடத்தனத்தின் மன்னன் அவரே! "அவார்ட்ஸ் முத்தம் மாதிரி. கொடுக்கும்போதும் சந்தோஷம் வாங்கும்போதும் சந்தோஷம்...." அதுக்கு அப்பரம் அவார்ட்ட சிநேகாவிடம் கொடுத்தது....யப்பா நான் இதுக்கு மேலேயும் எதுவும் சொல்லல....அப்பரம் ஏதாச்சு சென்சார் போர்ட் பிரச்சனை வந்திட போது!

எரிச்சல்ஸ்:

டிடி வந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த உடைகளை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டது சலிப்பை தந்தது. எரிச்சலாக இருந்தது. ஆனால், சிலர் போட்டு வந்த உடைகள், அப்படியே தூங்கி எந்திரிச்சு வந்த மாதிரியே இருந்துச்சு!! (வெங்கட் பிரபு, பிரேம் ஜி.....தூங்கிட்டீங்களா?)

சின்னப்புள்ளத்தனம்:

கௌதம் மேனன் ஹாரிஸிடம் விருதை கொடுத்துவிட்டு மேடையை விட்டு விழுந்து அடிச்சு பின்னால் ஓடியது....ஹாஹா..... அதுவும் கோபி அவரை வலுக்கட்டாயமாக கேள்வி கேட்டு மடக்கியது..... ஹாஹா......

அடுத்த அரசியல் தலைவர்:
விருது பெற்றால் சரி, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம். விருது பெற்றவரிடம் ஏன் யா விழுவுற? விஜய் கமலிடம் விருதை கொடுத்துவிட்டு காலில் விழுந்தார். விஜய் அரசியலுக்கு போக போகிறார் என்பதை நிருபித்துவிட்டார். அதுவும் மைக்கை பிடித்து அவ்வளவு நேரம் விஜய் பேசியது வியப்பாக இருந்துச்சு.

குடும்ப நிகழ்ச்சி:

என்னை மிகவும் ஆத்திரம் அடைய செய்தது சூர்யாவின் செயல் தான். ஆசிர்வாதம் வாங்கி கொள்வது வேறு, ஒருத்தன் காலில் விழுவது வேறு! சூர்யா சார், ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டீங்க? இதுக்கு முன்னாடி எத்தனையோ விருதுகளை பெற்றபோது, இப்படி தான் குடும்பத்தையே மேடைக்கு அழைச்சீங்களா?இல்லை இப்படி தான் யோசிக்காமல் காலில் விழுந்தீங்களா? நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி செய்த கூத்து ஒரு காரணம்! தேவையில்லாமல் சூர்யாவின் குடும்பத்தினரை மேடைக்கு வர சொன்னது, ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இப்படி ஒரு பொழப்பு தேவையா?

எங்களை முட்டாளாக்கிய விதம்:

ஏ ஆர் ரகுமான் வரவில்லை. ஆனால் அவருக்கு விருது கொடுத்தது போல் காட்டினீர்கள். சிம்ரன் best supporting actress விருது கிடைத்தது. அவர் வரவில்லை என்பதால் இவ்விருது கொடுக்கப்படாது என்று கோபி கூறினார். என்னடா நிகழ்ச்சி பண்ணுறீங்க? ஒரு standard procedure வேண்டமா?

பாம்பே ஜெய்ஸ்ரீ வரவில்லை. ஆனால், அவர் சார்பா விருதை திருமதி ஹாரிஸ் ஜெய்ராஜ் வாங்கி கொண்டார்.

????? என்னங்கடா நிகழ்ச்சி இது?
கமல் கமல் கமல்:

இந்த நிகழ்ச்சியை பொருட்செலவு இல்லாமல் செய்து இருக்கலாம். கமலின் வீட்டின் பூங்காவில் இந்நிகழ்ச்சியை simpleஆ முடித்து இருக்கலாம்! ரசிகர் வாக்குகள், நாக்குகள், மூக்குகள் என்று எங்களை ஏமாற்றுவதை, நிறுத்தவேண்டும்.

வருத்தம்:

அபியும் நானும் ஒரு விருதுகூட பெறாதது!

மெகா வருத்தம்:

ஏகன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்காதது!(ஹிஹிஹி...)

போங்கடா நீங்களும் உங்க அவார்ட் ஷோவும்!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, June 17, 2009

தடை போட யாருமில்ல-3

பகுதி 1
பகுதி 2

"எப்படி இருக்கே சசி? exams எல்லாம் நல்லா செஞ்சியிருக்கீயா?" என்றான் சித்தார்த். சசி பதிலே பேசவில்லை. என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"சசி, are you there?"

சசியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முப்பெரும் தேவிகள் 'பேசு' என்பதுபோல் சசியிடம் சைகை காட்டினர்.

"ah..yes...yes...how are you?" வார்த்தைகள் மெதுஓட்டம் ஓடின.

"என்ன busyயா? கொஞ்சம் disturbed ah இருக்குற மாதிரி பேசுற? are you alright?" என்றான் சித்தார்த்.

"yes yes alright." இப்போது வார்த்தைகள் marathon ஓடின.

"சும்மா தான் ஃபோன் பண்ணேன்...அப்பரம்...லீவுல என்ன plans?"

பக்கத்திலிருந்து சசியின் தோழிகள், சித்தார்த் என்ன சொல்கிறான் என்பதை கேட்க சசியின் கைபேசி அருகே தங்களது காதுகளை வைத்தனர். இருந்தாலும் ஒன்றும் கேட்கவில்லை அவர்களுக்கு.

"nothing...." சசிக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது. பேச்சை உடனடியாக முடித்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

"no plans ah? அப்போ...free தான் சொல்லுங்க?"

"yes!" யோசிக்காமல் பதிலை செப்பினாள்.

"so நம்ம ரெண்டு பேரும் வெளியே போலாமா?"

நேற்று சாப்பிட்ட சிக்கன் பிரியாணி வாந்தியாய் வெளியே வருவதுபோல் இருந்தது சசிக்கு. கொஞ்சம் மயக்கமும் வந்தது.

"நான் வெளியே ஃபிரண்ட்ஸ்கூட இருக்கேன்...." என்று சொல்லி பேச்சை முடிக்க முற்பட்டாள்.

சித்தார்த், "ஐயோ சாரி சாரி...முன்னாடியே சொல்லியிருக்கலாமே! சாரி....you enjoy. நான் அப்பரம் ஃபோன் பண்ணுறேன்....take care sasi." என்று கூறி முடித்தான்.

கைபேசியை கீழே வைத்த சசி மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மளமளவென்று குடித்தாள்.

சுதா, "என்ன சொன்னான்?"

விஜி, "எதுக்கு ஃபோன் பண்ணான்?"

கலா, "ஏன் திடீரென்னு இன்னிக்கு ஃபோன் பண்ணான்?"

கேள்வி மேல் கேள்விகளை கேட்டுனர். சசிக்கு தலை சுற்றியது. ஒரு பாட்டில் தண்ணீரை முடித்தவள், வாயை துடைத்துகொண்டு,

"வெளியே போலாமான்னு கேட்டான்?"

மூவரும், "என்னாது???"

விஜி, "எங்க?"

கலா, "அவங்க குடும்பமும் இவ குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு மாவிளக்கு போடறதுக்கு கூப்பிட்டு இருப்பான்.....யாரடி இவ..... ஏய் விஜி, இது கண்டிப்பா அது தான்."

விஜி, "confirmஆ அது தானா?"

கலா, "confirm."

சசிக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னய்யா சொல்றீங்க. அவன் outing கூப்பிட்டதுக்கு ஏன் இப்படி என்னைய போட்டு குழப்புறீங்க?"

கலா, "ஏய் ஏய் ஏய்....இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் வேணாம் கண்ணு. எல்லாரும் காதுல பூ சுத்துவாங்க...நீ பெரிய ipodட்டே சுத்துற!! கூட்டமா போனா தான் அதுக்கு பெயரு outing. ரெண்டு பேரு மட்டும் போனா அதுக்கு பெயரு dating. dating.dating. dating." என்று dating என்ற வார்த்தையை மூன்று தடவை எதிரோலி போல் சொன்னாள்.

சிரிக்க ஆரம்பித்தனர் சுதாவும் விஜியும். சசி கலாவை பார்த்து முறைத்தாள். தன்னை இதிலிருந்து காப்பாற்றுமாறு தோழிகளிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். அப்போது சித்தார்த்திடமிருந்து ஒரு குறுந்தகவல்,

சசி, இந்த சனிக்கிழமை போவோமா? evening 5. இடம், உன்னுடைய சாய்ஸ்?:)

இக்குறுந்தகவலை படித்த கலா, "இங்க பாருடி சாய்ஸ் கொடுக்குறாரு? இது பெரிய question paper பாரு? ஹாஹா...."

விஜி, " சும்மா போயிட்டு வா. இதுக்கு என்ன பயம்?"

சசி, "வீட்டுல தெரிஞ்சு கொன்னுடுவாங்க...."

சுதா, "யாருக்கும் தெரியாம போயிட்டு வா...."

கலா, "hey babe, it's very simple. எங்களோட வெளியே வரபோறேன்னு சொல்லிட்டு போயிட்டு வா....enjoy machi...ஆனா ஒன்னு மட்டும் புரியலை...அது எப்படி இந்த மாதிரி நல்ல விஷயங்கெல்லாம் உன்னைய மாதிரி அப்பாவி பொண்ணுங்களுக்கே நடக்குது."

கலா சுதா விஜி ஆகியோர் கைதட்டி சிரித்தனர்.

"அப்ப நான் ஓகே சொல்லிடவா?" அப்பாவியான முகத்துடன் சசி.

"ஓகேன்னு அனுப்பு. எங்க போலாம்னு முடிவு பண்ணி, அதையும் அனுப்பு." சுதா கூறினாள்.

"எங்க போறது?" சசிக்கு ஒரு சரியான இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.

"i have got an idea. இந்த சினிமா, பீச் எல்லாம் சுத்த போர்! நீங்க ரெண்டு பேரும் billiards விளையாட போங்க. அதுக்கு அப்பரம் டினர் போங்க." கலா தனது கருத்தை முன்வைத்தாள்.

"எனக்கு billiards விளையாட தெரியாதே...." சசி பதில் அளித்தாள்.

"சித்தார்த் கத்து தருவான் டி." என்று விஜி கூற, சுதாவும் கலாவும் சிரித்தனர்.

"அவனுக்கும் தெரியலைன்னா?" சசி கேள்வி கேட்டாள்.

"ரெண்டு பேரும் குச்சிய வச்சு, உப்பு கருவாடு ஊறவச்ச சோறுன்னு டான்ஸ் ஆடுங்க...யாரடி இவ....கண்டிப்பா சித்தார்த்துக்கு தெரிஞ்சு இருக்கும்.... நீ மெசேஜ் போட்டு கேட்டு பாரு. " என்றாள் கலா.

சசி உடனே குறுந்தகவல் அனுப்பினாள் சித்தார்த்திற்கு,
ஹாய் சித்தார்த். சனிக்கிழமை how about playing billiards and dinner?

அதற்கு உடனே பதில் வந்தது,
வாவ், நைஸ் சாய்ஸ்! ஐ லவ் billiards. gr8...see you then. can't wait for saturday.

சுதா, "பையன் ரொம்ப தான் குஷியா இருக்கான்?"

சாப்பிட்டு முடித்தார்கள் நால்வரும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

விஜி, "ok now let's prepare for sasi's dating....we will do a makeover for her."

சசி, "மேக் ஓவரா?"

கலா, "அதுக்கு ஏண்டி hangover ஆக போற மாதிரி கத்துற....."

முதலில் சசியின் கண்ணாடியை மாற்றுவதற்காக ஒரு கண்ணாடி கடையினுள் நுழைந்தனர்....

(பகுதி 4)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

தடை போட யாருமில்ல-2

பகுதி 1

சசி பட போஸ்ட்டர்களை பார்த்து கொண்டிருந்தாள். விஜி,சுதா, கலா வருவதை பார்க்கவில்லை. ஆனால் இவர்கள் சசியை பார்த்துவிட்டார்கள். மெதுவாக பூனைபோல் சென்று, பயம் காட்டுவதற்காக சசியின் தோள்பட்டையை குலுக்கினர் பின்னாடியிலிருந்து. சசி சற்று பயந்துவிட்டாள்.

கலா சிரித்தவாறு, "யாரோ சொன்னாங்க....இந்த மாதிரி படத்துகெல்லாம் வரமாட்டாங்கன்னு!"

சுதா, "நீ வேற, சசி நேத்திக்கே இங்க வந்திருப்பா. அவ பைய check பண்ணு, toothpaste, brush எல்லாம் வச்சுயிருப்பா...ஹிஹிஹி..."

அவர்கள் கிண்டல் செய்வதை சசியும் ரசித்து சிரித்தாள்.

"ஒகே கேர்ள்ஸ்....சீக்கிரம் டிக்கெட் வாங்குவோம்....படம் ஆரம்பிச்சுட போகுது." விஜி அவசரப்படுத்தினாள். நால்வரும் டிக்கெட்டுகளை வாங்கினர். பாப்கார்ன், கோக், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளையும் சேர்த்துவாங்கி கொண்டனர்.
வாரநாட்கள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. பெயர் போட ஆரம்பித்தனர். ஃபிரெஞ்சு படம் என்பதால் ஆங்கிலம் subtitleலுடன் படம் ஆரம்பித்தது.

2 மணி நேரம் படம் முடிந்தபிறகு, வெளியே வந்த நால்வரும் பக்கத்தில் இருந்த KFC கடைக்குள் சென்றனர். பையை மேசையில் வைத்த கலா, "ஐயோ படம் சுத்த போர். waste movie man! இதுக்கு போய் என்னாத்துக்கு m18 rating எல்லாம்?"
விஜியும் ஆம் என்பதுபோல் தலையாட்டினாள்.

"ஆமா கலா, ரொம்ப disappointing, கதையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல." சுதா தனது கருத்தை தெரிவித்தாள்.

கலா,"இதுக்கு நம்ம ஏதாச்சு தமிழ் படத்துக்கு போய் இருந்தாகூட நல்ல R21 காட்சிகள பாத்து இருக்கலாம்..." விழுந்து விழுந்து சிரித்தாள்.

சசிக்குள் தூங்கி கொண்டிருந்த தமிழச்சி, "ஏய், உனக்கு தமிழ் படம்ன்னா அவ்வளவு கேவலமா போச்சா?" அடுப்பில் வைத்த பால் போல் பொங்கி எழுந்தாள் சசி.

விஜி தனது கைபையிலிருந்து பணத்தை எடுத்து கொண்டு உணவு வாங்க சென்றுவிட்டாள்.

கலா, "ஏய் தோடா இங்க பாரு, பாரதிராஜா பெரியம்மா பொண்ணுக்கு வர கோபத்த...." என்று சசியை இன்னும் சீண்டினாள்.

சசி தொடர்ந்தாள், "நம்மளே நம்ம படத்த பத்தி இப்படி சொன்னா.....it's very bad man. தமிழ் படங்கள சில நல்ல படமும் இருக்கு."

கலா தன் கைபேசியை மேசையில் உருட்டியபடி, "ம்ம்ம்....சுஜாதா சொன்னது சரி தான்!"

இவர்கள் போடும் வாக்குவாதத்தை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சுதா, "சுஜாதாவா? யாரு அது? என்னா சொன்னாங்க?

"writer sujatha, yea! ஆயுத எழுத்து படத்துல சொன்னாரு.....உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறதுனால தான் மோசமான தமிழ் படம்கூட நல்லா ஓடுது" என்று கலா சொல்லி கொண்டே சசியை முறைத்து பார்த்தாள்.

சுதா சத்தம் போட்டு சிரித்தாள்.

"உண்மைய தான் சொல்றேன், தமிழ் படத்துல காட்டுற டபுல் மீனிங் விஷயங்க மாதிரி வேற எங்கயும் பாக்க முடியாது...யப்பா....right from scenes to song lyrics...ஐயோ...." கலா தன் வெறுப்பை காட்டினாள்.

கலா ஆள்காட்டி விரலை நீட்டி, "you know what sutha, காமசூத்ராவ எழுதியதே நம்ம தான்..."

கலா இப்படி பேசுவதை கேட்ட விஜி வாயை பிளந்தாள். அவளுக்கு அதிர்ச்சி!
உணவை வாங்கிகொண்டு வந்த விஜி அதற்குள், "நம்ம எப்ப டி அத எழுதுனோம்?"

கலா, "hey loosu. நம்மன்னா நம்ம இல்ல. பொதுவா சொன்னேன். i mean indians. an indian wrote kamasutra. but look at what indian cinema has done.... they have all vulgarised the whole concept of sex."

இதற்கு மேல் பொறுமை இல்லாத விஜி, "kala, just shut up." என்று காதுகளை மூடி கொண்டாள்.

கலா, "இங்க பாருங்க. this is exactly what i meant. இப்படி பேசுறது தப்புன்னு நிறைய பேருக்கு தோணும். அதுக்கு காரணம் இந்த மாதிரி தமிழ் சினிமா.....எல்லாரையும் கெடுத்து வச்சுயிருக்கு. படத்துல சூர்யா சட்டைய கழட்டிபோட்டு வந்தாலோ, இல்ல நமீதா வந்தாலோ பட்டிக்காட்டான் பஞ்சுமுட்டாய பாக்குற மாதிரி பாப்பாங்க விஜி மாதிரி ஆளுங்க....ஆனா என்னைய மாதிரி ஆளுங்க உண்மைய சொன்னா காத பொத்திப்பாங்க....என்ன உலகம்டா இது!"

சசிக்கு கோபம் தலைக்கு ஏற, "ஓய் என்னைய எதுக்கு டி இழுக்குற...நான் என்ன பண்ணேன்?"

சுதா, "ஐயோ ராமா....நிறுத்துங்க. ஏன் கலா, சசிய இப்படி கிண்டல் பண்ணுற?"

கலா, "விரிச்சு போடாத பாயும், சசியை கிண்டல் பண்ணாத வாயும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல!"

"ஹாஹா, தலிவா கலக்குற!" சுதா கலாவின் கையை குலுக்கினாள்.

விஜியும் சிரித்து கொண்டே, "அடியே அழகுகளா, ஸ்டாப் தி சண்டை! சாப்பாடுங்கப்பா, ஆறிபோச்சு..." என்று விஜி சொல்ல, ஒரு burger பொட்டலத்தை கலாவிடம் கொடுத்தாள். அந்நேரம் சசியின் கைபேசி மணி ஒலித்தது. கைபேசியில் காட்டிய நம்பரை பார்த்தாள். புதிய நம்பர் அது.

"ஹாலோ சசி speaking." என்றாள்.

"ஹாலோ சசி, நான் தான் சித்தார்த் பேசுறேன்."

சற்றும் எதிர்பார்க்கவே இல்லை சசி. அதிர்ச்சியில் வாயில் இருந்த burgerயை துப்ப, அந்த சிறுதுண்டு burger கலாவின் முகத்தில் விழுந்தது. கலா துடைத்தவாறு, "லூசா நீ!"

"சித்தார்த்????" என்றாள் சசி புருவங்களை உயர்த்தி.

"சித்தார்த்?????" என்றனர் மற்ற மூவரும் கோரஸாக.

(பகுதி 3)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, June 16, 2009

கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி, பதில் சொல்றது தான் ரொம்ப கஷ்டம்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் srivats. சார், என்னை பழிக்கு பழி வாங்கிவிட்டார்!!:) கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லனுமாம்!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இரண்டு மூனு பெயரை சின்ன பேப்பரில் எழுதி போட்டு கடவுள் முன் வைத்தார்களாம். என் அக்கா தான் ஒரு பெயரை எடுத்தாள். அந்த பெயர்-காயத்ரி. அப்பரம் வலைப்பூ ஆரம்பிக்கும்போது, புனைபெயரில் எழுத வேண்டும் என்ற ஆசை(பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் புனைபெயரில் எழுதுவதால் வந்த தாக்கம்...ஹிஹி...) ஆக ரொம்ப யோசிச்சு தமிழ்மாங்கனின்னு வச்சேன்.(மாம்பழம் பிடிக்கும் என்பதால்)

ஆக, எனக்கு 2 பெயருமே ரொம்ப பிடிக்கும். அப்பரம் காயத்ரி என்ற பெயர் பிடித்தமைக்கு இன்னொரு காரணம் சிம்ரன். ஆமாங்க....நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!! சிம்ரன் நடித்த ஜோடி மற்றும் சேவல் படங்களில் அவரது பெயர் 'காயத்ரி'!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நேத்து....

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

கோழி பிரியாணி, கோழி சுக்கா, கோழி வறுவல்....

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்ம்...மனசுக்கு தோணிச்சுன்னா, கண்டிப்பா நண்பரா ஆயிடுவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கழிவறையில் குளிக்க பிடிக்கும்! என்னய்யா கேள்வி இது......

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச‌து: ரொம்ப லொள்ளு பேசுவேன். கொஞ்சம் நல்லா எழுதுவேன்.நிறைய கனவுகள் காண்பது
பிடிக்காத‌து: கோபம், too sensitive

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்!pass!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்ல. தனிமை ரொம்ப பிடிக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல கலர்.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப‌து : வேற‌ என்ன‌? க‌ணிணிதான் :)
கேட்ப‌து: ஒன்னுமில்ல.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

orange. my favourite colour!!!!!!

14. பிடித்த மணம்?

தமிழ்மணம்(அட்ரா அட்ரா அட்ரா......) ஹாஹா...சரி சரி, பிடித்த மணம்....கோழி குழம்பு வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபி: நிறைய எழுத ஆசைப்படுபவர். நல்ல உற்சாகம் கொடுப்பவர்.::)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அவர் ஒரு ஆங்கில கவிதை எழுதினார். simply superbbb!! http://stavirs007.blogspot.com/2009/06/us-that-never-was.html

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். we eat, drink, talk,breathe cricket.(not like dhoni) ஆஹா...என்னை அறியாமல் வந்துவிட்டது:)

18. கண்ணாடி அணிபவரா?

perfect eyesight எனக்கு.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

romantic comedies, thriller, suspense, இந்தி படங்கள் எப்படி இருந்தாலும், பார்த்துவிடுவேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
drag me to hell- வயிறு, கண் எல்லாம் கலங்கிபோச்சு. பேய் படம்ங்க அது! ராத்திரி தூக்கம் வரல!

21. பிடித்த பருவ காலம் எது?

பள்ளி காலம் தான்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

self-made man by norah vincent.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இல்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த‌து: சத்தம்.... எப்படிங்க பிடிக்கும்?

பிடிக்காத‌து: போக்குவரத்து சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
new zealand.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுடு தண்ணி சூப்பரா போடுவேன். அப்பரம் என்னய்யா கேள்வி இது...தனித்திறமை...keyboard வாசிப்பேன்...:)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஆண்களின் ஆதிக்கம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஈகோ தான்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

queenstown in new zealand. ஆனால் நீண்ட நாள் கனவு- mumbai and new york செல்ல வேண்டும் என்று!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

bmw car, three-storey bungalow house with mini theatre, swimming pool and a mini gym. mthly income generated: US$30,000
ஹாஹா...எப்படி?

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை

(எப்படி காயத்ரி உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது....அட்ரா அட்ரா அட்ரா!! ஹிஹி)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, June 10, 2009

daddy mummy வீட்டில் இல்ல- தடை போட யாருமில்ல(பகுதி 1)

daddy mummy வீட்டில் இல்ல தொடர்கதையை தொடர்ந்து அதன் season 2 வந்துவிட்டது. அதாவது sequel 2. தெளிவாக சொல்லபோனால், 5 பாகங்களை கொண்டது அத்தொடர்கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தெடுத்த பாகங்கள் வரும். என்னமோ தெரியல்ல, எனக்கே இந்த 'daddy mummy வீட்டில் இல்ல' கதை ரொம்ப பிடிச்சு போச்சு.(பொதுவா நான் எழுதிய கதைகளை மறுபடியும் நான் படிக்க மாட்டேன்...:)

பிடித்து போனதால், தான் இதை தொடர வேண்டும் என்ற ஆவலும் வந்தது. so sequel 2 gonna start...start musik! இந்த சீசன் 2க்கு தலைப்பு- தடை போட யாருமில்ல! (எப்படி...?)

daddy mummy வீட்டில் இல்ல கதையை படிக்க: http://enpoems.blogspot.com/2009/04/daddy-mummy-1_13.html
------------------------------------------------------------------------------------------
தடைபோட யாருமில்ல-1

"ஏய் நான் இப்போ என்னடி செய்ய?" சசி குழம்பினாள். பாவமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. சசிக்கு பயமாக இருந்தது. மெத்தையில் விழுந்து புரண்டு சிரித்து கொண்டிருந்த விஜி,

"கவலைப்படாதே சசி, பரிசம் போட்டுட வேண்டியது தான்!" மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள். தன்னை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் என்பதை தாங்கி கொள்ள முடியாமல் சசி, "நான் கிளம்புறேன்."

சிரித்து கொண்டிருந்த சுதாவிற்கு சசியின் கோபம் புரிந்தது. "ஏய், என்ன சசி நீ, நாங்க சும்மா சிரிச்சோம்.. இதுக்கு போய் கோச்சிக்கிட்ட....சரி ஃபிரியா விடு! just don't reply him anything for now. exams எல்லாம் முடியட்டும். அப்பரம் இத பத்தி பாத்துக்கலாம்."

சுதா சற்று சீரியஸா பேசியது சசிக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், கலா தன் பங்கு கிண்டலை கொட்டினாள். "காதல் வந்தா சொல்லியனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்...." என்ற அழகான பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் வேண்டுமென்றே பாடி சசியை நக்கல் அடித்தாள்.

ஒரு வாரம் ஓடியது. தேர்வுகளும் முடிந்துவிட்டன. கடைசி தேர்வு முடிந்து அனைவரும் சசி வீட்டிற்கு சென்றனர். அவளது தம்பி ஹாலில் உட்கார்ந்து விடியோ கேம்ஸ் விளையாடி கொண்டு இருந்தான்.சசியின் அம்மா சோபாவில் உட்கார்ந்து ஏதோ கணக்கு வழக்குகளை புரட்டி கொண்டிருந்தாள். சசியும் அவள் தோழிகளும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

சசியின் அம்மா, "வாங்கடியம்மா....என்ன பரிட்சையெல்லாம் pass பண்ணிடுவீங்களா?"

அதற்கு கலா, "என்ன ஆண்ட்டி எங்கள பாத்து இப்படி கேட்டுடீங்க? உங்க பெயர காப்பாத்தீயே தீருவோம். இது சசி மேல சத்தியம்." என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசியின் தலையில் அடித்தாள். அனைவரும் சிரித்தனர். சிரித்து கொண்டிருந்த சசியின் அம்மாவின் முகம் சற்று மாறியது கையிலிருந்த billலை பார்த்தபிறகு.

அவர், "என்ன சசி, உன் mobile phone பில் ஏன் இவ்வளவு அதிகமா வந்து இருக்கு?"

சசிக்கு பயம் கவி கொண்டது. சசி அம்மா கையில் இருந்த பில்லை வெடுக்கென்று பிடிங்கி அதைப் பார்த்தாள். ஆம், அளவுக்கு அதிகமாக தான் இருந்தது. சசிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பொங்கலுக்கே வெடி வெடிக்கும் கலா, தீபாவளி வந்தால் சும்மா இருப்பாளா? சதாரணமாகவே சசியை கிண்டல் செய்யும் கலா, இச்சமயம் சசியின் நிலைமை கண்டு உற்சாகம் அடைந்தாள். கிண்டல் செய்ய தக்க தருணம்!

"அது ஒன்னுமில்ல ஆண்ட்டி....சித்தார்த்....." என்று கலா வாயை திறந்தாள்.

"who siddarth, boys movie hero siddarth?" வீடியோ கேம்ஸ் விளையாடி கொண்டிருந்த தம்பி அவர்களிடம் கேட்டான். கேள்வியை கேட்டுவிட்டு மறுபடியும் விளையாட்டில் மூழ்கிவிட்டான்.

கலா, சசியை இப்படி மாட்டிவிட்டது விஜிக்கும் சுதாவிற்கும் ஆச்சிரியமா இருந்தது. சசிக்கு அதிர்ச்சி. கலா முடிப்பதற்குள் சசி,

"ஒன்னுமில்ல மா, இன்னிக்கு சித்தார்த்தனந்தா சாமிகள பத்தி டீவில போடறத்த பத்தி சொல்லுறா?" சமாளித்தாள்.

"நான் என்ன கேட்குறேன், நீ என்ன சொல்லுற?" அம்மா தன் புருவங்களை சுருக்கினார்.

"இந்த மாசம், exams time. கிளாஸ்மேட்ஸ் நிறைய பேரு doubts கேட்க ஃபோன் பண்ணாங்க, நானும் ஃபோன் பண்ண வேண்டியதா இருந்துச்சு." என்ற உண்மையை சொன்னாள். அம்மாவும் சரி சரி என்று தலையாட்டினார். இருந்தாலும் ஒரு எச்சரிக்கையுடன், "அடுத்த மாசம்...." என்று ஆரம்பிக்கும்போதே சசிக்கு புரிந்துவிட்டது அம்மாவின் ஆர்டர்!

சசியை ஓரளவுக்கு தவிக்கவிட்ட சந்தோஷத்தில் தனக்குள்ளே சிரித்து கொண்டு சசியின் அறைக்கு சென்றாள் மற்ற தோழிகளுடன். அனைவரும் உள்ளே சென்றது. அறையில் இருந்த தம்பியின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கலாவை அடிக்க சென்றாள், "நான் எப்ப டி சித்தார்த்துக்கு ஃபோன் பண்ணேன்....ஏன் டி இப்படி என்னைய மாட்டிவிட்டே? நாசமா போ! உன் பொய்க்கு அளவே இல்லையா? stupid woman."

கலா சுதா பின்னாடி ஒலிந்துகொண்டாள்.

"ஏய் சரிவிடு, அவ சும்மா சொன்னா....what are we going to do during the holidays?"விஜி கேட்டாள்.

"அதுக்கு நிறைய நாளு இருக்கு. அத அப்பரம் யோசிப்போம். நாளைக்கு நம்ம எல்லாரும் வெளியே போவோம்....படம் பார்க்க." கலா மெத்தையில் புரண்டு கொண்டே.

"என்ன படம்?" சுதா கேட்டாள்.

கலா, "french படம். M18 movie!" நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

சசி வாயை பிளந்து, "what????????"

கலா, " hey this is no R21. just a matured content movie. கலைப்படம் மச்சி! ஆமா அது சரி, எதுக்கு இவ்வளவு பெரிய reaction உனக்கு. நம்ம எல்லாரும் ஓவர் 18. தப்பு இல்ல."

சசிக்கு கலாவின் ஐடியா பிடிக்கவில்லை, முகத்தை சுளித்து கொண்டு, " நான் வரல."

விஜி சிரித்து கொண்டே, " நீ இப்படி தான் ஆரம்பிப்ப...அப்பரம் கடைசில எப்படி முடியும்னு இந்த உலகத்துக்கே தெரியும்டி. சும்மா வா!"

சுதா, "இந்த மாதிரி படம் எல்லாம் தப்பில்லையா?" முகத்தை அப்பாவித்தனமாக வைத்து கொண்டு.

விஜி, "வந்துட்டாய்யா question paperக்கு பொறந்தவ?"

கலா, "சுதா, இதலாம் தப்பு தான். ஆனா...வைரமுத்து என்ன சொல்லியிருக்காரு. தப்புகள் இல்லையின்னா தத்துவம் பொறக்காதுன்னு சொல்லியிருக்காரு!"

சசி, "உன்கிட்ட சொன்னாராக்கும்?"

சசியின் கேள்வி பிடிக்காமல் அவளை பார்த்து, "ஆமாண்டி, நேத்திக்கு ஸ் எம் ஸ் பண்ணி சொன்னாரு. சரிதான் போடி....யாரு வரீங்களோ, வாங்க. விஜி, நீ வர தானே?"

விஜி எப்போதுமே கலாவின் பக்கம் என்பதால் நான் இல்லாமல் எப்படி என்பதுபோல் ஒரு சிரிப்பை சிரித்தாள்.

மறுநாள் காலையில் எப்படியோ சுதாவை சமாதானப்படுத்தி அழைத்து கொண்டு சென்றார்கள். போகும்வழியில் சுதா, "நான் சசிக்கு ஃபோன் பண்ணி பார்த்தேன், ஆனா அவ எடுக்கல்ல....."

கலா, "அவ தூங்கிகிட்டு இருப்பா மேன்...சரி விடு. அவளுக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்."

திரையரங்கை அடைந்தது மூவருக்கும் அதிர்ச்சி. சசி அங்கே காத்து கொண்டிருந்தாள்........

(பகுதி 2)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, June 9, 2009

கனா கண்ட காலங்கள்(தொடர் பதிவு)

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த வானவில் வீதி கார்த்திக் அவருக்கு ஒரு நன்றி. விடுமுறை நாட்களில் நடந்த சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகள், விளையாடிய விளையாட்டுகள் பத்தி எழுதவேண்டுமாம். என்னை பொருத்தவரை விடுமுறையில் ஜாலியாக செலவழித்த காலம் நிறைய உண்டு. அது எப்போது என்றால்? ஒவ்வொரு முறையும் பெற்றோர்கள் வெளிநாடு செல்லும்போது தான். ஹாஹாஹா.... அது என்னமோ தெரியலைங்க..... ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாலி,இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று இருந்தாலும்,

"டாடி மம்மீ வீட்டில் இல்ல" காலம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உண்மையை சொல்லிட்டேன் அவ்வளவு தான்! அதிகபடியான சுதந்திரம் கிடைக்கும். நாள் முழுவதும் டீவி, கணினி, படங்கள் என்று ஜாலியாக இருக்கலாம். பணம் கொடுத்துவிட்டு போவார்கள். ஆக, எங்க வேண்டும் என்றாலும் போய் நல்லா வாங்கி சாப்பிடலாம்!

குறிப்பா, நண்பர்களோடு வெளியே செல்லலாம் எந்த ஒரு permission வாங்கும் session இல்லாமல்.
------------------------------------------------------------------------------

இந்தியாவிற்கு போன சில பயணங்கள் ஜாலியாக இருந்தது. சின்ன வயதாக இருக்கும்போது ஜாலியாக இருக்கும், ஏன் என்றால் நம்மை அதிகமாய் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இப்போது போனால் அவ்வளவு தான், நம்ம வயசை தெரிந்த மறுநொடியே வெறுப்பேத்தும் அந்த கேள்வியை கேட்பார்கள். :(

சின்ன வயதாக இருந்தபோது, மாமா மகள், அவள் தம்பி, என் அக்கா, பக்கத்து வீட்டு பசங்களுடன் கில்லி, கிரிக்கேட் ஆடிய காலம் எல்லாம் உண்டு. சில சமயங்களில் கிரிக்கேட் பந்து பக்கத்து வீட்டில் விழுந்துவிடும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் பந்தை வாங்குவோம். மறுபடியும் அவ்வாறே நடக்கும். ஒரு சில சமயம் அவர்களுக்கு எரிச்சல் வந்து பந்தை தரமாட்டார்கள். பந்து இல்லாமல் கொட்டாங்குச்சி வச்சு விளையாடுவோம்!:)
------------------------------------------------------------------------------------------

ஒரு முறை அப்பாவின் நண்பர் குடும்பத்தோடு மலேசியா சென்றோம். அப்போது எனக்கு 8 வயது இருக்கும். எங்களது அறைகளில் ஒரு விளையாட்டு விளையாடினோம். பேப்பர்களில் சில விஷயங்களை எழுதுவோம். அதை செய்து காட்ட வேண்டும். நான் எடுத்த பேப்பரில்- "ஆட வேண்டும்" என்று இருந்தது. எனக்கு ரொம்ப ஒரு மாதிரியாய் போச்சு. ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அடம்பிடித்தேன் ஆட மாட்டேன் என்று. கடைசியில் அனைவரின் கண்களை மூட சொன்னேன்... 5 வினாடி ஆடிய பிறகு உட்கார்ந்து கொண்டு, "நான் ஆடி முடிஞ்சுட்டேன். கண்ண திறங்க." என்றேன்:)
------------------------------------------------------------------------------------------

மற்றபடி விடுமுறைகளில் நிறைய படம் பார்ப்பேன். இந்த விடுமுறையில் கிட்டதட்ட 10த்துக்கு மேற்பட்ட ஹிந்தி படங்களை பார்த்து இருப்பேன்:)
-----------------------------------------------------------------------------------------

இத்தொடர்பதிவுக்கு கோபி, srivats, மற்றும் ரீனா அவர்களை அழைக்கிறேன்....வாங்கோ வாங்கோ வாங்கோ....

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

ம்ம்ம்....

காலை மணி 6 ஆனது. மாலினி சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள். குளித்து முடித்துவிட்டு, மாறனுக்கு பிடித்த காலை உணவை தயார் செய்தாள். பூஜை அறையில் சிறிது நேரம் தியானம், ஒரு ஸ்பெஷல் வேண்டுதல். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, படுக்கை அறைக்குள் சென்றாள். ஆபிஸ் செல்வதற்கு தயாரானாள். மாறனுக்கு பிடித்த வெள்ளை நிற சுடிதார் ஒன்றை அணிந்தாள். கண்ணாடி முன்னாடி நின்று பொட்டு வைக்கும்போது மாறன் இன்னும் உறங்கி கொண்டிருப்பதை கண்டாள்.

அவன் அருகில் அமர்ந்தாள் மாலினி. வெட்கம் கலந்த சந்தோஷம் மாலினியின் உடம்பிலுள்ள நரம்புகளில் ஊடுருவியது. கலைந்திருந்த அவனது முடியை சரி செய்து அவனது காது அருகே, "happy wedding anniversary dear." என கூறலாம் என்று குனிந்தபோது, மாறனின் கைபேசி அலறியது. திடுக்கிட்டு எழுந்தான். மாலினியை கவனிக்கவில்லை.

"ம்ம்ம்...ஒகே. இன்னும் கொஞ்ச நேரத்துல இருப்பேன் ஆபிஸுல..." என்று மாறன் கைபேசியில் பேசிகொண்டே குளியலறைக்கு சென்றான். தன்னை கவனிக்காதது மாலினிக்கு சற்று வருத்தத்தை தந்தது.

மாறன் ரொம்ப ரொம்ப அமைதி. கேட்ட கேள்விக்கு பதில். சத்தமாக சிரிக்ககூட மாட்டான். புன்னகைகூட ஒரு செண்ட்டிமீட்டர் தான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன்.

காலை உணவை மேசையில் எடுத்த வைத்தாள் மாலினி. வேலை காரணமாக தினமும் அவளால் காலை உணவு செய்ய முடியாது. சாப்பிட உட்கார்ந்த மாறன் எதுவும் பேசவில்லை. இன்று ஸ்பெஷலா செஞ்சு இருக்காளே, ஏதேனும் விசேஷமா என்று மாறன் கேட்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். மாறன் அமைதியாக சாப்பிட்டான். அவன் இன்றைய நாளை மறந்துவிட்டான்.

"சாப்பாடு நல்லா இருக்கா மாறன்?"

"ம்ம்ம்.. நைஸ்." செய்தித்தாளை புரட்டினான்.

"இன்னிக்கு வெளியே போவோமா?"

"...."

"மாறன்?...."

"i'll msg u later."

காபியை அருந்திவிட்டு உடனே கிளம்பிவிட்டான். மாலினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உண்மையாகவே மறந்துவிட்டானா, இல்லை வேண்டும் என்றே தெரியாததுபோல் நடிக்கிறானா. surprise ஏதேனும் செய்வதற்காகவே இந்த நடிப்பா என்று அவளுக்குள் பல சிந்தனைகள் ஓட, குழாயில் தண்ணீர் ஓடியது. பாத்திரங்களை கழுவினாள். வீட்டின் வாசல் மணி ஒலித்தது. கதவை திறக்க சென்றாள்.

"சாரி...மறந்துட்டேன் மாலினி..." மாறன் வாசலில். மாலினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"என்னோட கார் key..." எடுத்து கொண்டு மறுபடியும் கிளம்பிவிட்டான். மாலினிக்கு ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.

இவன் ஏன் இப்படி இருக்கிறான். சிரிச்சு பேச மாட்டேங்குறான்... எப்ப பாத்தாலும் வேலை..வேலை... முக்கியமான நாள்கூட ஞாபகமில்ல...- மனதில் புலம்பல்கள் வெடித்தன.

ஆரம்பித்தில் அவனது அமைதியான சுபாவத்தை ரசித்தவள் இன்று அதை ரசிக்க முடியவில்லை. அவன் பக்கத்தில் இருந்தும், அவன் இல்லாததுபோலவே உணர்கிறாள் மாலினி.

தொலைக்காட்சி பார்க்கும்போது மாலினி, "ஏய், அஜித் இந்த மாதிரி மொக்கையான படத்துல நடிச்சு இருந்திருக்க கூடாது. i think his vaali movie was the best... தப்பான படத்துல நடிச்சு அவரோட மார்க்கெட்ட கெடுத்துக்குறான்..."

மாறன் அஜித்தின் தீவிர ரசிகன் என்றபோதும்கூட, "ம்ம்ம்...this movie is bad." அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அவன் அஜித்தை பத்தி ஏதேனும் சொல்ல, அதற்கு தானும் ஏதேனும் சொல்லி, சின்ன சண்டை போட்டு கொள்ளலாம் என்று மாலினிக்கு ஆசை. இருந்தாலும், வாக்கியத்தின் கடைசியில் முற்றுப்புள்ளி வைப்பதுபோல், மாறன் எல்லாவற்றிருக்கும் ஒரு புன்னகை. புன்னகை அழகாய் தெரிந்த காலம் மாறி இன்று அது மாலினிக்கு பெரிதாய் ஏரிச்சலை உண்டாக்கியது சில நேரங்களில்.

"என்ன ஆச்சு மாலினி?" ஆபிஸை வந்து அடைந்ததும் அவள் தோழி வினாவினாள் மாலினியின் முகத்தை கண்டபிறகு.

"nothing...." என்று சொன்னவள் காலையில் நடந்தவற்றை கொட்டினாள் தோழியிடம்.

தோழி," guys are like that! even mine forgets everything. ஆனா, எந்த cricket match என்னிக்குன்னு கேளு? they have it all at their finger tips." தோழியும் சலித்து கொண்டாள். மீண்டும் தொடர்ந்தாள்,

"சரி நீ மாறனுக்கு ஒன்னும் present பண்ணலைய்யா?"

மாறனின் ஆபிஸில், sheela flower shopலிருந்து ஒரு பையன் நின்றுகொண்டிருந்தான். மாறனின் ஆபிஸில் வேலை பார்க்கும் ஒருவர் அந்த பையனிடம்

"நீங்க யார பாக்க வந்தீங்க?"

அந்த பையன் கையில் ஒரு தாளை நீட்டி, "மிஸ்ட்டர் மாறனோட wife mrs malini, இந்த flower bouquetட்ட மாறன் கேபின்ல வைக்க சொன்னாங்க."

மாறனின் மேசையில் பரிசு வைக்கப்பட்டது. ஆனால், மாறன் கேபினில் இல்லை. அன்று காலை ஆபிஸ் வந்ததும் கம்பெனி விஷயமாக headquartersக்கு சென்றுவிட்டான்.

பூக்களில் இருந்த ஒரு வாழ்த்து அட்டையில்-

hello handsome, happy anniversary. இந்த ஒரு வருஷம் போனதே தெரியல்லடா. இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.just love you lots! ஒரே ஒரு சின்ன request. உன்கூட நிறைய டைம் spend பண்ணனும்னு ஆசையா இருக்கு. நீ நிறைய என்கூட பேசனும்னு ஆசையா இருக்கு. இத படிக்கும்போதாவது கொஞ்சம் சிரியேன்! :) இந்த ஒரு வருஷத்துல நான் ஏதாச்சு தப்பா பேசியிருந்தா, really sorry for that! இப்போ எனக்குள்ள இருக்குற உணர்ச்சிகள பத்தி எழுத வார்த்தைகள் இல்ல.:) அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.

hugs&kisses

with love,

malini

(இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துருடா!:)

பூக்களும் வாழ்த்து அட்டையும் மேசையில் கிடந்தன.

மாலை மணி 6 ஆனது. மாலினி வீடு திரும்பிவிட்டாள். ஆனால், மாறன் இன்னும் வரவில்லை. எந்த வேலையையும் செய்ய மனமில்லாமல் டிவியிலுள்ள எல்லாம் சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள். மாறன் வந்தான் இரவு 9 மணிக்கு. மாலினி உட்கார்ந்து இருப்பதை கவனித்தான். புன்னகையித்தான்.
மாலினி அவனை கண்டு கொள்ளவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை.

அவனிடம் பேசகூடாது என்று கோபம் இருந்தாலும் அவனிடம் பேசமால் இருக்க முடியவில்லை மாலினிக்கு,

"மாறன், இன்னிக்கு ஆபிஸுல நீ இருந்தியா?"

"இல்லமா, நான் headquartersக்கு போயிட்டேன்."

பரிசை அவன் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்பது மாலினி விளங்கியது.

அவனை பார்க்க பிடிக்கமால் திரும்பி படுத்திருந்தாள் மாலினி. நாட்கள், வாரங்கள் ஆயின. அவள் கொடுத்த பரிசை பற்றி கேட்கவில்லை. கேட்க மனமில்லை.

ஒரு சனிக்கிழமையன்று ஏதோ ஒரு சிந்தனையில் மாலினி ஜன்னல் அருகே நின்று யோசித்து கொண்டிருந்தாள். மாறன் பின்னாடியிலிருந்து அவளை அணைத்து, "happy anniversary malini." என்று அவள் இடது காது மடலை அழகாய் உரசினான்.

மாலினிக்கு ஆச்சிரியம்! மறு வினாடி கோபம். இத்தனை வாரங்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டினாள்.

"ஓ...உனக்கு இப்ப தான் ஞாபகம் வந்துச்சா? for your information, நம்ம கல்யாண நாள் பல வாரத்துக்கு முன்னாடியே வந்துட்டு. உனக்கு இப்ப தான் ஞாபகம் வருதா? அது சரி... உனக்கு என்னையே ஞாபகம் இருக்கான்னு தெரியல்ல...."

மாறன் பேசமால் நின்றான்.

தொடர்ந்தாள் மாலினி, "எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா அன்னிக்கு. ச்சே.... உனக்கு நான் முக்கியமில்ல மாறன். உனக்கு எப்போதும் உன் வேலை தான் பெரிசு. i feel like a stranger in this house....." அவளுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் குளமாகின.

மாறன் பேசினான், "நான் கல்யாண நாள்ல மறக்கல்ல... நீ தான் மறந்துட்ட?"

மாலினிக்கு சற்று குழப்பமாக இருந்தது.

மாறன், "உங்க வீட்டுல உள்ளவங்க சொன்னதுனால, இந்த arranged marriageக்கு ஒத்துகிட்ட. ஆனா, எனக்கு தெரியும் ஆரம்பித்துல உனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சுன்னு....உண்மைய சொல்ல போனா உனக்கு என்னைய பிடிச்சு இருந்துச்சாகூட தெரியல்ல... but after sometime, u became very comfortable. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. முதல் தடவ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்ன. அந்த நாள்ல நான் மறக்கவே இல்ல மா- 8th june 2008. என்னைய பொருத்தவரைக்கும் அன்றைய நாள்லேந்து தான் நாம்ம உண்மையா வாழ ஆரம்பிச்சோம்.... நீ என்கிட்ட ஐ லவ் யூ சொன்ன நேரம்கூட நல்ல ஞாபகம் இருக்கு. it was at 3.30pm. "

கடிகாரத்தை பார்த்தாள் மணி 3.35pm என்று காட்டியது. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கன்னங்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன ஆனந்தத்தால். மேலும் தொடர்ந்தான் மாறன்,

"அன்னிக்கே பாத்தேன் உன் flower bouquetட்ட. it was really sweet.thanks malini. இன்னிக்கு சொல்லனும்னு தான் இருந்தேன், நீ அதுல சொல்லியிருந்த ஆசைய நிறைவேத்திட்டேன். 5 நிமிஷத்துக்கு மேல பேசியிருப்பேன்ல?" என்றான் அந்த ஒரு செண்ட்டிமீட்டர் புன்னகையுடன்.

மாலினி மாறனை இறுக்கி கட்டிபிடித்து கொண்டாள்.

மாறன், "சாரி மா, என் மேல கோபமா?"

மாலினி, "yes you idiot!" செல்லமாய் அவன் நெஞ்சில் அடித்தாள்.

*முற்றும்*
------------------------------------------------------------------------------------

credits: இக்கதையை எடிட்டு செய்ய உதவியாக இருந்த என் அருமை தம்பி வானவில் வீதி கார்த்திக் அவர்களுக்கு ஒரு நன்றி.

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, June 2, 2009

2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்!

சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை....

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே!

தலைப்பு:2050ல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு: வசந்தாவின் கணவன்
கதை: சுசீலாவோடு எப்படி?

சரி படிக்கும்போதே ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. நானும் முயற்சி செய்யலாம்னு...

1) தலைப்பு: மாமியாரின் கோபம்
கதை: பொண்ணு பொறந்திருக்கு!

2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."

3) தலைப்பு: முடிவு
கதை: "மச்சி, ஊத்திகிச்சுடா!"

4)தலைப்பு:கனவுகள்
கதை: வேலை போச்சு!

5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"

இந்த கடைசி கதை மட்டும் சிலருக்கு புரியாமல் இருக்கும். அது என்ன மேட்டர்ன்னா... பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறோம். லீவு நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது, பிள்ளைகளுக்கு தங்களது அப்பாவையே அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு இருக்கு நிலைமை. அது தான் அந்த கதை! புரிஞ்சுதோ????

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!

நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B

fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!

அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!

ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, May 31, 2009

மன்மதன் - ஒரு நிமிட கதை

இரவு உறக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசித்தான் மதன். தொலைக்காட்சி பார்க்க தன் அறையிலிருந்து ஹால்லுக்கு வந்தான். எந்த விளக்கையும் ‘ஆன்’ செய்யவில்லை. இருட்டில் டிவி பார்க்க தொடங்கினான். தொலைக்காட்சியில் ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடல் வந்தபோது சற்று உற்சாகமடைந்தான். பாடலை ரசிக்க தொடங்கினான். அவனும் சேர்ந்து அப்பாடலை முணுமுணுத்தான். பையிலிருந்த தனது கைபேசியை எடுத்து பார்த்தான் – மணி 11.45 என்று காட்டியது.

“ஐ லவ் யூ டியர்” அனுப்பினான் குறுந்தகவலை மாலா, கீதா, சதா, சுதா, லீனாவிற்கு…….

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Saturday, May 30, 2009

ஜஸ்ட் சும்மா(30/5/09)

இன்று என் keyboard grade 1 தேர்வை எழுதினேன். எனக்கு தேர்வு என்ற வார்த்தையை பார்த்தாலே பயம் கவ்வி கொள்ளும்(கொல்லவும் செய்யும்)! இன்று காலை 1030 தேர்வு நடந்தது. ஏசி அறையாக இருந்தாலும் வேர்த்து கொட்டியது. ஏதோ ஓரளவுக்கு செய்தேன். தேர்வின் ஒரு பகுதி இசை கருவிகளை அடையாளம் காட்டுதல். ஒன்றை சுட்டி காட்டி இது என்ன என்று கேட்டார்.

நான் "......ம்ம்ம்....." தலையை சொறிந்தேன். அது என்ன என்று தெரியும். ஆனால் mental block ஆயிடுச்சு. என்ன சொல்றதுன்னு தெரியல்ல.

அவர் சற்று முறைத்தவாறு, " this is கஞ்சீரா!"

நான் புன்னகையித்தேன். அசடு வழிந்த புன்னகை. "you are such an idiot." என்றது மனசாட்சி. தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை தெரியும். தேர்வு முடிந்தவுடன், "குட்" என்றார். ஆனால் இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோன்னு தோணிச்சு!:(
--------------------------------------------------------------------------------

நம்ம வானவில் வீதி தம்பி கார்த்திக்கை ரொம்ப நாளா ஆள காணும். எங்கப்பா இருக்கிற? chatல் அடிக்கடி வருவார். இப்போ அதுகூட இல்ல! நல்ல புள்ளையா மாறிட்டாரா என்ன?
--------------------------------------------------------------------------------

கந்தசாமி பட பாடல்களை கேட்டேன். 8 பாடல்களில் விக்ரமே நான்கு பாடல்களை பாடி இருக்கிறார். பாடல் பல ரொம்ப இளமை துள்ளலோடு இருக்கு. excuse me kandasamy என்னும் பாடல் என்னை ரொம்ப கவர்ந்து இழுத்துவிட்டது. காரணம் பாடல் வரிகள். ஆனால் பாடல் காட்சிகளை பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியா தான் இருக்கு. இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோ. வெளிநாடுகளில் பாடல்களை காட்சி அமைத்து பணத்தை வாரி கொட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி ஸ் தானு. அங்கிள், ஆட்டோல போறத்துக்கு காசு இருக்கா?

இத்தனை பொருட்செலவு அவசியமா? சரி இதுக்கே இப்படின்னா, அங்க யாரோ ஒரு பாடல்களுக்கு 100 கெட்-டப்புல வருகிறாராம். உஷ்,........முடியல ராகவேந்திரா சாமி!
----------------------------------------------------------------------------------

சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள் என்ற புத்தகத்தை படித்து முடித்தேன் நேற்று. கதை எப்படி எழுதுவது என்பதை பற்றி நிறைய செய்திகள் அப்புத்தக்கத்தில் இருந்தன. 2 வார்த்தைகளில்கூட கதை எழுதலாமாம்!

what!! 2 words??- இது தான் என் முதல் reaction. தொடர்ந்து படித்தேன். ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. பக்கம் பக்கமா எழுதுற எனக்கு 2 வார்த்தைகளில் எழுதுவது என்பது சிரமமே! ஆனால் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்...
------------------------------------------------------------------------------------

நேற்று ஒரு சின்ன புதிய சாதனை. இந்த வலைப்பூவின் followers ஐம்பது ஆகிவிட்டது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 50வது நம்பர் சுரேஷ் குமார். நன்றிங்கோ!

தங்க சங்கிலி, ஒரு பிரியாணி பொட்டலம் அவருக்கு கொடுக்கலாம் என்ற ஆசை தான். ஆனால், உலக பொருளாதாரம் சற்று மந்தமான நிலையில் இருப்பதால், அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் அது சேர்க்கப்படும்!:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, May 28, 2009

Book Tag

தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)

சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .. திறந்தவுடனே தூ(து)க்கம் வந்து விடும். மூணு இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துச்சு. என் அக்கா நிறைய படிப்பாங்க. அவங்க ஒரு புத்தகத்த கையில கொடுத்து இத படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்பரம் தான் ஓரளவு படிக்கும் பழக்கம் வந்துடுச்சு.

one book that changed your life:

ஆமா....அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் பெரிசா படிக்கவில்லை. ஒரே ஒரு சின்ன மாற்றம், நல்ல பழக்கம் வந்துச்சு. நான் சொன்ன மாதிரி இந்த வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது என் வாழ்க்கையில்- one night at the call centre.

The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.

one book you would want on dessert island:
"நான் வித்யா" புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நம்ம வலைப்பூ தோழி living smile வித்யா எழுதிய புத்தகம்.

one book that made me laugh:
five point someone- இப்புத்தகத்தில் வரும் பல காலேஜ் சம்பவங்கள் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

one book that made me cry:

children of war- ஈராக்கில் உள்ள குழந்தைகள் போரை பற்றி தங்களது ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். அவர்களின் சிறு பேட்டிகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். படிக்க படிக்க கண்ணு கலங்கிடுச்சு. கொடுமையான வாழ்க்கை அவர்களது! ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல...:(

one book you wish you had written:
சர்வதேச அளவில் விருது பெற்ற எல்லா புத்தகங்களையும் தான்! ஹாஹா...

one book you wish had never been written:

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்! ம்ம்ம்...அப்படி எதுவும் எனக்கு தெரியல்ல...

books that you are currently reading:

jasvinder sanghera எழுதிய 'shame' மற்றும் சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள்

books that you have meaning to read:

self-made man(இது உண்மை கதை. ஒருத்தி ஒரு வருடம் ஆணாக இருந்து பிறகு மறுபடியும் பெண்ணாக மாறுகிறாள்.)
மற்றும்
six suspects

அடுத்ததாக அண்ணன் பிரேம்குமாரை அழைக்கிறேன்.

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Monday, May 25, 2009

சும்மா அரட்டை-5

ஞாயிற்றுக்கிழமை இரவு எங்க ஊர் வசந்தம் ஒளிவழியில் 'முதல் மரியாதை' படத்தை போட்டான். நான் பார்த்து கொண்டிருந்தபோது தோழனின் குறுந்தகவல்கள்...

தோழன்: are u watching முதல் மரியாதை now?

நான்: yep yep...நீ?

தோழன்: yea man!!!! செம்ம படம். எத்தனையோ தடவ பாத்து இருக்கேன், ஆனா ஒவ்வொரு தடவையும் ரொம்ப ரொம்ப வித்தியாசமா தெரியுது. i think ராதா is damn cute!!

நான்: ஹாஹா....நல்லா எஞ்சாய் பண்ணு!

தோழன்: ஏய், எனக்கு ஒரு பொண்ணு பாரேன்...அப்படியே ரவிக்கை இல்லாத ராதா மாதிரி!

நான்: அட உன் வீட்டுல நல்லா இருந்துட்டு போவ...இந்த எடுப்பட்ட பய மூஞ்சிக்கு ராதா மாதிரி பொண்ணு கேட்குதா?? ஹாஹா....:)

தோழன்: ஹாஹா...சும்மா சும்மா! ஆமா, நீ ஏன் வடிவுக்கரசி மாதிரி பேசுற??

நான்: படத்துல ஐக்கியம் ஆயிட்டேன்:)ஹிஹிஹி.... hey you know that sevili character...she was a singaporean...she studied in christchurch sec sch.now i think she is in america.

தோழன்: அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?

நான்: அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க..hey for ratha's voice, rathika dubbed for her. அதுக்கு ராதிகாவே நடிக்கவிட்டு இருக்கலாம்!

தோழன்: நோ...நோ.... எனக்கு ராதா தான் வேணும்! she is the best!

நான்: ஆஹா... நீ அடங்க மாட்டீயா? ஏய் இப்ப இருக்காங்க பாரு ராதா...ரொம்ப weight போட்டு குண்டா தெரியுறாங்க.

தோழன்: என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! ஹிஹி.... என் ராதாவும் அப்படி தான்!

நான்: டேய் நீ அடங்கவே மாட்டீயா? உஷ்...யப்பா!!!!!!

--------------------

முந்தைய அரட்டைகள்

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, May 24, 2009

மனசுக்குள் மத்தாப்பூ அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யாவிற்கு பிறந்தநாள். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், திவ்ஸ் குருவே!

அவரை நான் திவ்ஸ் என்று தா அழைப்பேன்.:) அவரின் கதைகளை படித்து தான் நானே கதை எழுத ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களில் அவர் தான் எனக்கு inspiration. ஆக, இந்த பொன்னாளில் அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு பாட்டு அவருக்கு dedicate பண்ணுறேன்....

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, May 21, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-7

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்- upen patel.
அன்று 'namastey london' என்னும் ஹிந்தி படத்தை பார்த்தேன். அதில் இவர் நடித்தார். பார்த்தவுடனே, "wow...not bad!" என்றேன்.

பிறந்து வளர்ந்தது லண்டனில். நிறைய விளம்பரங்களில் வந்தவர். zee டிவியின் supermodel hunt பரிசை 2002ல் வென்றவர்.

attractive feature- smile.:)

இவருக்கு வயது 29! ஆனால், பார்த்தால் ஏதோ 21 வயது பையன் மாதிரி இருக்காரு!! ஹிஹிஹி...:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, May 19, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-3

பகுதி 1

பகுதி 2

குழந்தைகள் பெயர் பட்டியல் கொண்ட இணையத்தளத்தை பார்த்து கொண்டிருந்தாள். சில பெயர்கள் ரொம்ப புதுசா இருந்தாலும் சிரிப்பா இருந்தது. அதை பார்த்து சிரித்தேன்.

"ஏய் இப்ப எதுக்கு சிரிக்கிற?"

"உனக்கு ரொம்ப ஆர்வம் தான் போ. இப்ப தான் கல்யாணமே முடிஞ்சு ஒரு மாசம் ஆயிருக்கு. அதுக்குள்ள குழந்தைகளுக்கு பெயர் வைக்குற அளவுக்கு போயிட்டீயா..." அவள் தோளில் சாய்ந்து கொண்டேன்.

"இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நமக்கு குழந்தை இருக்கும். அப்போ என்ன பெயர் வைக்கலாம்னு டென்ஷன் ஆக கூடாது பாரு. அதுக்கு தான்... இப்பவே... இங்க பாரு.. இந்த பெயர் நல்லா இருக்குல.." ஒரு பெயரை சுட்டி காட்டினாள்.

"பொண்ணு பொறந்தா..ஷாமினி....பையனா இருந்தா ஷாமன். பிடிச்சுருக்கா?" என்னிடம் கேட்டாள். புன்னகையை சம்மதமாய் அளித்தேன்.

"பொண்ணுங்க எப்ப ரொம்ப அழகா இருப்பாங்கன்னு தெரியுமா?" என்றேன். தெரியாது என்று தலையசைத்தாள்.

"அமெரிக்காவுல ஆராய்ச்சி செஞ்சு இருக்காங்களாம்."

"என்னென்னு?"

"பொண்ணுங்க pregnantஆ இருக்கும்போது தான் ரொம்ப அழகா தெரிவாங்கன்னு.."

"அதுக்கு?"

"உன்னைய ஒவ்வொரு வருஷமும் அழகா காட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்."

"ச்சீ...." அனிதா என் நெஞ்சில் முகம் புதைத்து வெட்கப்பட்டாள். தொடர்ந்தாள்,

"அப்போ ரெண்டு பேரு போதாதே?"

இருவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

"சார்..." மருத்துவமனையில் தாதி என்னை அழைத்தார். இன்னொரு பேப்பரை நீட்டி,

"இதுல இன்னொரு கையெழுத்து போடுங்க" என்றாள்.

"எதுக்கு..." நான் கேட்பதற்குள் டாக்டர் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார்.

"அனிதாவுக்கு கொஞ்சம் சீரியஸா இருக்கு. she is in a critical condition. குழந்தை இல்ல அனிதா... யாராச்சு ஒருத்தரை தான் காப்பாத்த முடியும்." என்றார் டாக்டர்.

எனக்கு யார் வேண்டும் என்பேன்? உருகி உருகி காதலித்த மனைவியா? இல்லை ஆண்டுகளாய் ஆசைப்பட்ட குழந்தையா? வேதனை என்னை கொஞ்சம் கொஞ்சமாய் திண்றது. மரணம்- இந்த வார்த்தை என் வாழ்க்கையில் கேட்க போகிறேன் இரண்டாவது முறையாக.

முதன் முறை....

"அண்ணா, எப்படி இருக்கீங்க? அமெரிக்காவுல இப்ப climate எப்படி இருக்கு?" என்றேன்.

"ஓ..it's good." என்றார் அவர்.

"அம்மா அப்பா எங்க?"

"......."

"அண்ணா, இருக்கீங்களா? ஹாலோ ஹாலோ.... அப்பா எங்க? அப்பாகிட்ட கொஞ்சம் கொடுங்க...பேசி ரொம்ப நாளாச்சு?"

"........."

"அண்ணா, அப்பா எங்க?"

"சாரி.... அப்பா இறந்து 2 மாசம் ஆச்சு."

"what!!!??!! ஏன்....என்கிட்ட......"

"அம்மா தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க."

தலையில் கைவைத்து உட்கார்ந்து இருந்தேன். அண்ணாவிற்கு ஃபோன் செய்த சம்பவம், அப்பாவின் மரண செய்தி- இவை யாவும் மருத்தவர் அனிதாவின் நிலைமை பற்றி சொன்ன பிறகு என் மனதில் வந்துபோனது. ஆம், அப்பாவின் மரணத்திற்கு பிறகு, என் வாழ்க்கையில் இன்னொரு முறை ஒரு மரணம். இம்முறை மனைவியாக இருக்கலாம் அல்லது குழந்தையாக இருக்கலாம்.

ச்சே....எந்த ஆண்ணுக்கும் வரகூடாத நிலைமை.

என் மனதிற்குள்ளே, "அப்பா, நீங்க தான் இவங்கள காப்பாத்தனும். உங்க ஆசிர்வாதம் தேவைப்பா....ப்ளீஸ் பா.... ப்ளீஸ் பா.... எனக்கு ஒரு பையன் பொறக்கனும்.... நீங்க மறுபிறவி எடுத்து வரனும். இல்லேன்னா உங்க குணம் இருக்கிற ஒரு பொண்ணு பொறக்கனும். எப்படியாச்சு அனிதாவையும் காப்பாத்துங்க பா ப்ளீஸ் பா...." மனம் சிறுபிள்ளை போல் அழுதது.

உள்ளே ஒரு பயங்கரமான அலறல் சத்தம். அனிதாவின் குரல். அதற்குபிறகு எந்த சத்தமும் இல்லை. என் உயிர்நாடி நின்று போனதுபோல் உணர்ந்தேன். மருத்தவர்களும் தாதியர்களும் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தனர். எந்த செய்திக்கும் தயாராக இருந்தேன் நான். மருத்துவரின் முகத்தை பார்க்க தைரியம் இல்லை.

என் தோளை தொட்டு, "god is great. it is a miracle. அனிதாவும் குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. by the way...உங்களுக்கு twins பொறந்திருக்கு. " சிரித்து கொண்டே சொன்னார். உயிர் மீண்டும் வந்தது எனக்கு.

"தேங்கஸ் டாக்டர்...." என்னால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் அனிதாவையும் குழந்தைகளை பார்க்க அறை கதவை திறந்தேன்.

மருத்துவர் அவர் அறைக்குள் சென்றபோது நிறைய trainee மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்,

"டாக்டர், இது எப்படி சாத்தியமாச்சு? இப்படி உள்ள பொண்ணுங்களுக்கு pregnancy ரொம்ப complicationsஎ தராதா?"

அதற்கு டாக்டர், "ஆம்.. கொஞ்சம் complicated தான். அனிதா ஒரு physically disabled person. அவங்களுக்கு ஒரு கால் இல்லாம இருந்தாலும், அவங்க mentally ரொம்ப strong. நிறைய நம்பிக்கை இருந்துச்சு அவங்களுக்குள்ள... so she was able to cooperate with us better. " என்று சொல்லியவர் தன் கணினியில் உள்ள விளக்கப்படம் மூலம் மற்றவற்றை விளக்கினார்.

அனிதா மயக்கத்தில் இருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு குழந்தைகள்- ஒரு பையன், ஒரு பொண்ணு. என் ஆள் காட்டி விரலால் அவர்களின் விரல்களை தொட்டேன். இருவரும் என் விரலை பிடித்து கொண்டு சிரித்தனர்.

என்னையும் அறியாமல் வாய்விட்டு அழுதேன்!

*முற்றும்*

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Monday, May 18, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-2

பகுதி 1

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகாய் தெரிந்தாள். அவளிடம் சென்று

"ஹாலோ, நான் பக்கத்து ஆபிஸிலிருந்து...." என்று சொன்னவுடனே புரிந்து கொண்டாள்.

"ஓ யெஸ் யெஸ்.... பாஸ் சொல்லியிருந்தாங்க..." என்று கூறிகொண்டே ஒரு கோப்பை நீட்டி அதில் உள்ளதை விளக்கினாள். அவள் சொல்வது எதையுமே கவனிக்கவில்லை, ஆனால் நான் அவளை மட்டுமே கவனித்து கொண்டிருந்தேன். அவளின் குரல், அவள் பேசிய விதம், வேலைகளை சரிவர பார்த்த விதம்- இப்படி அனைத்தையுமே சேர்த்து ரசித்தேன். அன்று முதல் என் ஆபிஸிலிருந்து அவள் ஆபிஸுக்கு போக வேண்டிய கோப்புகளை அனைத்தையுமே நானே கொண்டு சென்றேன். அவளை பார்க்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொண்டேன்.

வேலை விஷயங்களையும் தாண்டி, ஒரு நல்ல நட்பு உருவானது. என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஒரு நாள் மதியம், அவள் ஆபிஸுக்கு சென்றேன். மதிய உணவு நேரம். அவள் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள் தோழிகளுடன். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை எனக்கு பொறுமையில்லை.

"அனிதா..உன்கிட்ட கொஞ்ச தனியா பேசனும்..." என்றேன்.

"சார் தனியா பேசனும்னு...நடுகடல்ல நின்னு தான் பேசனும்.." என்றாள் அவளின் தோழி ஒருத்தி. அனைவரும் சிரித்தனர். என் நிலைமை புரியாமல் அனைவரும் ஜோக் அடித்து சிரித்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.

"நான் வரேன்." என்று கோபத்துடன் கிளம்பினேன். என் கோபத்தை புரிந்து கொண்டவள் என் பின்னாடியே என் பெயரை கூவி கொண்டு வந்தாள்.

"ஏய்...நில்லுப்பா... ஏன் இவ்வளவு கோபம்? என்ன ஆச்சு? என்ன பேசனும்? any problem?" என்றாள்.

"ஆமா...ஒரு முக்கியமான விஷயம்..." வார்த்தைகளின் வேகம் குறைந்தது.

" அனிதா, எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. எப்போ உன்னைய முத தடவ பாத்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்...நீ தான் என் மனைவின்னு. பாத்தவுடனே ஐ லவ் யூ சொன்னா...அது நல்லா இருந்திருக்காது... அதான் நல்லா பழகின பிறகு... உன்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்றேன்.

நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. எதையுமே பேசமால் ஆபிஸைவிட்டு வெளியேறினாள். இரண்டு நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. உடல் நலம் சரியில்லை என்று ஆபிஸில் கூறி இருந்தாள். எனக்கும் மட்டும் தான் தெரியும், சரியில்லாமல் கிடப்பது அவளது மனம் என்று.

அந்த இரண்டு நாட்கள் அவளுக்கு பல முறை ஃபோன் செய்து பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. பிடிவாதக்காரி! பல்லாயிரம் மேசேஜ்கள் அனுப்பினேன்! எதுக்குமே பதில் இல்லை. மூன்றாவது நாள் அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றேன். விடுதிக்கு வெளியே நின்று ஃபோன் செய்தேன். என் காதல் தோற்குமா என்ன? அவள் ஃபோன்னை எடுத்தாள்.

தழுதழுத்த குரலில் அவள், "ம்ம்ம்...சொல்லு?"

நான்,
" சாப்பிட்டீயா?" எதுவுமே நடக்காததுபோல் நான் பேசினேன்.

"இன்னும் இல்ல... " என்றாள்.

"எத்தன நாளா...சாப்பிடாம இருந்த?" என் குரலில் சற்று அதிகாரம் உயர்ந்தது. மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை.

"நான் உன்னைய உடனே பாக்கனும்.... உன் ஹாஸ்டல் பக்கத்துல தான் இருக்கேன்.. உள்ளே அழகான பசங்கள விடமாட்றாங்க...சோ..இங்க பக்கத்துல இருக்கிற சன்ஹன் பார்க்கிற்கு வா..." நான் சொன்னதை கேட்டு கண்டிப்பா புன்னகையித்து இருப்பாள்.

வரமாட்டாள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் வந்தது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. என் கையில் இருந்த உணவு பொட்டலத்தை கொடுத்து அவளை சாப்பிட சொன்னேன். என் முகத்தை சரியாக பார்க்கவில்லை. பொட்டலத்தை வாங்கி வைத்து கொண்டாள். சாப்பிடவில்லை. இரண்டு நாட்களாக அவள் சரியாக தூங்கவில்லை. அவள் முகத்தில் தெரிந்தது சோர்வு.

அவள் கண்முன் விழுந்த முடியை எடுத்த அவள் காதுக்கு பின் சொரிகியபடி,
"நான் என்ன கேட்டேன்னு... நீ இப்படிலாம் பண்றே?" என்றேன்.

"இதலாம் சரியா வருமா?" என்றாள் கண்ணீருடன்.

அவள் சொன்ன விதத்தில் இருந்து நான் புரிந்து கொண்டேன்- அவளுக்கும் என்னை பிடித்து இருந்தது. கல்யாணம் வரை போகாமல் காதல் வெறும் காதலாக போய்விடுமோ என்ற அச்சம் தான் அவளுக்கு.

"ஓ... அப்போ உனக்கும் ஓகே தான்னு சொல்லு! ஐயோ.. நான் நினைச்சேன் நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி.. ஒரு ஃபிரண்டா தான் நினைச்சு பழகினேன்னு சொல்லுவே... நம்மளும் துரத்தி துரத்தி... லவ் பண்ணி அப்பரம் ஒகேன்னு சொல்ல வைக்கலாம்னு இருந்தேன்... இப்படி சப்புன்னு முடிச்சிட்டீயா..." என்று முகத்தை விளையாட்டுக்காக பாவமாய் வைத்திருந்தேன்.

நான் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கண்களை துடைத்தபடி.

நாட்கள் கடந்தன. நிறைய பேசினோம். நிறைய சிரித்தோம். அனிதாவுக்கு புத்தகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரிந்த எல்லாம் புக்-ஷாப்புக்கும் அழைத்து சென்றேன். நீண்ட நேரம் கடற்கரையில் உட்கார்ந்து பேசினோம். நிறைய சந்தோஷம், அவ்வபோது சின்ன சின்ன சண்டை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு- in this world, you might be someone but to someone, you might be the world. இவ்வாறு அவளது உலகம் நானாகவும் என் உலகம் அவளாகவும் வாழ்ந்தோம்!

"சனியன் சனியன்...மூணாவதும் பொட்ட புள்ளையா பெத்துருக்கா உன் பொண்டாட்டி. சனியன் பிடிச்சவ..." என்று மருத்துவமனையில் கத்தி கூச்சல் போட்டாள் ஒருத்தி. ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்த நான் பக்கத்திலுள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். அவளது மகனின் சட்டையை பிடித்து கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு கொண்டிருந்தாள்.

"இந்த எழவு பிடிச்சவள உனக்கு கட்டிவச்சது என் தப்பு தான்..." தலையில் அடித்து கொண்டாள். பிறந்த குழந்தையை கையில் வைத்துகொண்டிருந்தாள் தாதி. அக்குழந்தை கத்தியவளின் மூன்றாவது பேத்தி.

"அந்த சனியன் பிடிச்சவளுக்கு பொறந்த இந்த சனியன எடுத்துட்டு போயிடு!" மறுபடியும் கத்தினாள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை- அது ஏன் எல்லா மாமியார்கள் தனது மருமகள்களை சனியன் என்று திட்டுகிறார்கள்?

என் அம்மாவும் அப்படி தான்!

"சனியன்... என்ன ஜாதியோ, என்ன மதமோ? அவள கட்டிக்க போறீயா? உனக்கு என்ன கேடு வந்துச்சு?" என் அம்மா ஒரு நாள் பூகம்பத்தை ஆரம்பித்துவிட்டார்.

நானும் அனிதாவும் பீச், புத்தககடைகளில் சுற்றியது அனைத்துமே என் பெற்றோர்களுக்கு தெரிந்துவிட்டது. நான் உறுதியாக நின்றேன். என் அப்பா என் பக்கம். ஆனால், அம்மாவை மீறி அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"அவன் ஆசைப்படுறான்...அவன் விருப்பபடி நடக்கட்டுமே!" அப்பா முயன்றார்.

"என்ன ஆசைப்படுறான்? நீங்க எதும் பேசாதீங்க... அவனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க?" அம்மா பாய்ந்தார்.

"அம்மா, அனிதா ரொம்ப நல்ல பொண்ணு. அவ அனாதை இல்லத்துல வளர்ந்ததுனால கெட்ட பொண்ணுனு ஆயிடாது? அவங்க அம்மா அப்பா செஞ்ச தப்பு... அவ என்ன பண்ணுவா? ப்ளீஸ் மா... நீங்க ஒரே ஒரு தடவ அவகிட்ட பேசி பாருங்க..." காலில் விழாத குறையாய் அம்மாவிடம் கெஞ்சினேன். பிச்சை எடுத்தேன் என்றுகூட சொல்லலாம்.

அம்மா பிடிவாதத்தை விடவில்லை. அப்பா எடுத்து சொன்னார். ஆனால் கேட்கவில்லை.எத்தனை முறை போராடி பார்த்தேன். என் அம்மா சம்மதம் தரவில்லை.

"ஓடி போய் கல்யாணம் பண்றது, திருட்டு கல்யாணம் அப்படி இப்படின்னு ஏதாவது செஞ்சு வச்சே.... என்னை உயிரோட பாக்க முடியாது." அம்மா மிரட்டினார். எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் emotional blackmail இது. அம்மாவின் பிடிவாதம் சில நாட்களில் சாந்தம் ஆகம் என்று நினைத்து அனிதாவும் நானும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம்.

அம்மாவுக்கு தெரியவந்தது. கோபத்தில் குதித்தார். அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அம்மாவும் அப்பாவும் கிளம்பி சென்றனர். என் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டார் என் அம்மா. ஆனால், அப்பா அமெரிக்கா கிளம்பும் முன் எங்களை வந்து பார்த்தார் எங்களது புது வீட்டில்.

"வீடு ரொம்ப நல்லா இருக்கு. கச்சிதமா இருக்கு...very good selection." அப்பா பாராட்டினார்.

"அனிதா தான் பா select பண்ணா."

"அதான் ரொம்ப extra ordinaryயா இருக்கு. வெரி குட் மா." மாமனார் மருமகளை பாராட்டுவதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

"அத்தையும் வந்திருந்தா நல்லா இருக்கும். எங்க மேல உள்ள கோபத்துல நீங்க அங்க போறது எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு மாமா." என்றாள் அனிதா.

"நான் என்ன மா பண்ண முடியும். உங்க அத்தை அப்படி தான். காச்சுமூச்சுன்னு கத்துவா. அவ அப்படி தான். நாளைக்கே உங்களுக்கு குழந்தை பொறந்த செய்தி கேட்டா, உடனே ஓடி வந்திடுவா..."அப்பா சிரித்தார். அனிதா என்னை பார்த்து புன்னகையித்தாள். புன்னகை கலந்த வெட்கம் அது.

ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்து இருந்த நான் கடிகாரத்தை கவனித்தேன். மருத்துவமனைக்கு வந்து இரண்டு மணி நேரம் ஆனது. மருத்தவர்களிடமிருந்து எந்த செய்தியும் வந்தபாடு இல்லை. என் எதிரே இருந்த சுவரில் குழந்தைகள் சிரிப்பதுபோல் படம் ஒட்டியிருந்தது.

அனிதாவிற்கு குழந்தைகள் என்றால் ரொம்ப ஈஷ்டம்.

ஒரு நாள் மெத்தையில் உட்கார்ந்து மடிகணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த நான் அவள் அருகே சென்று அவள் அனுமதியின்றி அவள் கழுத்தோரத்தில் இதழ் பதித்தேன்.

பிடிக்காதவளாய் அவள், "ஐயோ... என்னது..ச்சீ..." செல்ல கோபத்துடன் என்னை தள்ளினாள்.

"ஆமா நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே?" நான் எனது பார்வையை அவள் மடிகணினி மீது செலுத்தினேன். அதை பார்த்தபிறகு சிரிப்பு வந்தது...

(பகுதி 3)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Friday, May 15, 2009

கையில் மிதக்கும் கனவா நீ-1

அனிதாவின் கதறல் சத்தம் எனக்கு வேதனையை தந்தது. வீட்டிலிருந்து மருத்துவமனை போகும் வரை அழுகை. வலி தாங்க முடியவில்லை. தல பிரசவம் அப்படி தான் இருக்குமாம். மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். நேற்று வரைக்கும் தைரியமாக இருந்தவளின் முகத்தில் பயம் படர்ந்ததை கவனித்தேன்.

மருத்துவமனை வாசலில் ஒரு பிள்ளையார் சிலை. பார்த்தேன். கும்பிடவில்லை. கொஞ்ச காலம் வரை இருந்த கடவுள் நம்பிக்கை, ஒரு கால கட்டத்திற்கு பிறகு முற்றிலுமாக இல்லை. காரணம் உண்டு.

என் மனதில் சுத்தியலால் யாரோ அடித்தார்கள். இல்லை, அடித்தது மனசாட்சி.

என்னால் தானே இப்படி...
ஏதோ ஒரு 5 நிமிஷம் சுகத்திற்காக...
ஆனால் குழந்தைகள் தானே கல்யாண வாழ்க்கையை முழுமை பெற செய்கிறார்கள்...
அவளுக்கு ஒன்னும் நடக்காது...
ஒரு வேளை அவளுக்கு ஏதேனும்....
குழந்தைக்கு ஏதேனும்...

ச்சே...தேவையில்லாத சிந்தனைகள் என்னை வாட்டி வதைத்தது. மருத்தவர்கள் ஒரு பக்கம் பரபரப்புடன் சிகிச்சை அறைக்கு ஓடினர். தாதி ஒருத்தி வந்தாள்,

"formalities.....நீங்க தானே mrs anithaவோட கணவர்....இந்த form fill up பண்ணுங்க" ஒரு பேப்பரை நீட்டினாள்.

படித்து பார்க்க மனமில்லை. கையெழுத்து போட்டேன்.

"அனிதாவுக்கு...ஒன்னும்...." துக்கம் தொண்டையை அடைத்தது. கட்டுபடுத்தி கொண்டேன்.

"we are trying our level best." அவசரமாக சென்றாள்.

தமிழ் சினிமாவில் பிரசவம் காட்சி வந்தால் மழை வரும். அப்போது எல்லாம் கிண்டல் செய்து இருக்கிறேன். ஆனால், அன்று வெளியே பெய்த கொண்டிருந்த மழை என்னை சாந்தப்படுத்தியது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். மழை, மின்னல்!

உள்ளே அனிதா கதறி கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொரு முறையும் துடித்து கத்தும்போது, மனதில் இடி.

ஜன்னல் வழியே காற்றும் சாரலும் என் நினைவுகளை 8 மாதங்களுக்கு பின் இழுத்து சென்றன.

"வந்துட்டீயா அனிதா...எப்படி போனுச்சு office day rehearsal. நாளைக்கு show success தான் சொல்லு." படுக்கையில் படுத்து இருந்தேன். தூக்க கலக்கத்தில் எழுந்தேன்.

அனிதா ஒரு ஆபிஸில் கிளார்க் வேலை பார்க்கிறாள். அப்போது தான் அனிதா வீடு திரும்பினாள். இரவு மணி 10.30.

"ஓகே பா...நல்லா போனுச்சு....hope it turns out to be a successful show."என்றாள். என் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் போட்டிருந்த மஞ்சள் சுடிதார் எனக்கு பிடிக்கவில்லை. காலையிலே சொன்னேன். ஆனால் அவள் கேட்கவில்லை. கைகளை மடக்கி என் தலைக்கு பின்னால் வைத்தவாறு,

"இந்த டிரஸ் உனக்கு suitஆ இல்ல. கழட்டி போட்டுடு. நான் வேணும்னு help பண்ணவா" என்று எழுந்தேன்.

"ச்சீ....ஜொள்ளா..." என்னை தள்ளினாள். புன்னகையித்தேன்.

"நீ சாப்பிட்டீயா?" என்றேன்.

"இன்னும் இல்ல...." என்றாள். அவள் இன்னும் சாப்பிடாமல் இருந்தது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.

"அனிதா, உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன்... சரியான நேரத்துக்கு சாப்பிடனும்னு...இவ்வளவு நேரம் ஆயிட்டு... இன்னும் நீ...."

"இல்லடா... rehearsal பாத்துகிட்டே இருந்துட்டோம்... நேரம் போனது தெரியல்ல..."

"ஆமா... எப்ப பாத்தலும் ஒரு பதில் வச்சிருப்ப...."

" சாரி சாரி...." கெஞ்சினாள். அவள் விரல்களால் என் நெற்றியில் கிடந்த முடியை விலகிவிட்டு முத்தமிட்டாள். சிரித்தாள். கோபம் பஞ்சாய் பறந்தது.

"சரி சாப்பாடு ரெடி பண்றேன்... எத்தன தோசை வேணும்?" என்றேன்.

"ஒன்னு போதும்"

அவள் குளித்து முடித்து வருவதற்குள் நான் இரண்டு தோசைகளுடன் அறைக்குள் சென்றேன்.

"டேய், நானே வந்து சாப்பிட்டுகிறேன்... நீ எதுக்கு ரூம் வரைக்கும்..." அவள் முடிப்பதற்குள், அவளை படுக்கையில் அமர வைத்தேன்.

"இந்தா..." தோசையை சிறியதாய் பிய்த்து ஊட்டிவிட்டேன்.

"ஐயோ நானே சாப்பிட்டுகிறேன்..." என் கையை தடுத்தாள்.

நான் தொடர்ந்து ஊட்டிவிட்டேன். அடம்பிடிக்காமல் உண்டாள்.

"நீ சாப்பிட்டீயா?" என் தொடையில் கைவைத்து கேட்டாள்.

"ம்.." ஒற்றை சொல்லில் பதில். ஆனால் உண்மையில் அன்று நான் சாப்பிடவில்லை. மனசு சரியில்லை. ஒரு மாதிரியா இருந்துச்சு.

போர்வையை போர்த்தியபடி படிப்பதற்கு புத்தகத்தை கையில் எடுத்தாள்."சாரி டா... தூங்கிட்டு இருந்த நீ... உன் தூக்கத்த கெடுத்துட்டேன்ல..."

"ம்ம்...ஆமா...எப்ப உன்னைய முதல் தடவ பாத்தேனோ அப்பவே."

"ஐயோ...ச்சே...நீ ரொம்ப மோசம்." சிரித்தாள். தூங்கும் முன் கொஞ்சம் நேரம் புத்தகம் படிக்கும் பழக்கம் அவளுக்கு. அவள் படித்து கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். புத்தக்கத்தில் அடுத்த பக்கத்தை திருப்பினாள், என்னை பார்க்காமலேயே,

"ஏய் ஜொள்ளா...என்ன இங்கயே பாத்துகிட்டு இருக்கே?"

"உன் மடியில கொஞ்சம் நேரம் சாஞ்சிக்கவா?"

மனசு சரியில்லாதவர்கள் தண்ணி அடிக்க போகிறார்கள். அவர்களுக்கு பொண்டாட்டி இல்லையா? மனைவியின் மடியில் தலை வைத்துப்படுக்கும் இன்பம் தெரிந்தவன் எவனும் தண்ணி அடிக்க போகமாட்டான்.

"என்ன ஆச்சு?" என் தலைமுடியை கோதியபடி கேட்டாள்.

"நாளான்னிக்கு மெடிக்கில் செக்-கப்ல...positiveஆ தானே வரும்?..." அவள் வயிற்றில் கைவைத்தேன். வெட்கப்பட்டாள்.

நாங்கள் நினைத்தபடியே மருத்தவர், "வாழ்த்துகள்! அனிதா, you are pregnant."
எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"ஐயோ...அம்மா!" அனிதா அவசர சிகிச்சை அறையில் கத்தினாள். ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த நான் திடிக்கிட்டு போனேன். சுயநினைவுக்கு வந்தேன். பக்கத்தில் யாரோ ஒருவர் என் தோளை தட்டி,

"சார்... எனக்கு பையன் பிறந்து இருக்கான்....சுவீட் எடுத்துக்குங்கோ..." என்றார். நான் மறுத்தேன். அவர் வற்புறுத்தினார்.

சுவீட் கையில். என் வாழ்க்கை சுவீட் ஆனாதே அனிதா வந்தபிறகே.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்.....

அவள் வேலை செய்த ஆபிஸ் அருகே தான் என் ஆபிஸ். நான் அந்த ஆபிஸில் சேர்ந்து கொஞ்ச காலம் கழித்து தான் பக்கத்தில் ஆபிஸுக்கு ஒரு வேலை விஷயமாக போக நேரம் கிடைத்தது.

அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகை தெரிந்தாள். அவளிடம் சென்று....

(பகுதி 2)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

biggest loser-எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-3

உடற்பயிற்சியுடன் டையட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டை சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald's, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்கே நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவு பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

பின்னர், aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்சிவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா.. சரியா ஆடி நம்ம என்ன உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போக போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, caloriesகளை குறைப்பதே எனது நோக்கம்.

இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், ரொம்ப இளைச்சுட்டே என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
காலேஜில் நிறைய பேர், "ஏய் என்னடி... செஞ்சே...you look good...you lost so much of weight.." என்று பாராட்டினர்.

போட முடியாத சட்டைகள் பல அதற்கு அப்பரமும் போட முடியவில்லை.
காரணம்?
அவை இப்போது பெரியாதாய் இருந்தன.ஹாஹாஹா.... நிறைய உடைகளை alter செய்து தான் போட்டுகொண்டேன்.

வீட்டில் ஒரு digital weighing machine வாங்கினேன். அதில் தினமும் காலையில் எடை பார்த்தபிறகு தான் மறுவேலை நடக்கும்.

எனக்கு ஒரு ஆசை, பேராசைகூட வைத்து கொள்ளலாம். 53 கிலோவில் இருக்கும் நான், 50க்கு வர வேண்டும் என்பதே! எல்லாரும் 50 கேஜி தாஜ்மகால்ன்னு சொல்றாங்களே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு முறை உணர்ந்து பார்க்க வேண்டும்.

சிரமம் எடையை குறைப்பது என்றால் அதைவிட சிரமம் 53விலே maintain செய்வது.

பரிட்சையில் தோல்வி அடைந்தவன் வெற்றி பெற்றுவிடுவான் அடுத்த முறை. ஆனால் இந்த 99 மார்க் வாங்கினவன் 100 மார்க் எடுக்க ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். இந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். 9 மாதங்களில் 53க்கு வந்த நான், 53லிருந்து 50க்கு வர ரொம்ப கஷ்டமாக இருக்கு!:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, May 14, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன் - 2

பகுதி 1

நீச்சல் வகுப்பில் நானும் இன்னொரு சீன பெண் தான். அவங்க சீனியர். பல வித ஸ்டைல்கள் தெரியும். நான் beginner. பயிற்சிவிப்பாளர் வந்தார். புகைப்பிடிப்பவர். புகை நாற்றம் வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருந்தாலும் கட்டுபடுத்தி கொண்டேன். முதல் வகுப்பு என்பதால் ரொம்ம்ப பேசினார். lecture அடித்தார்.

'பொதுவா இந்தியர்களுக்கு நீச்சல் வராது." என்றார். முறைத்தேன்.

"இல்ல இல்ல...அவர்கள் ஓடுவதில் தான் experts" என்று சமாளித்தார்.

பக்கத்தில் 2, 3 வயது குழந்தைகள் சுலபமாக நீந்துவதை பார்த்து பொறாமை வந்தது. சின்ன வயதிலேயே நீச்சல் கற்று இருக்கலாமே என்ற ஏக்கம். அப்போது வசதி இல்லை, பெற்றோர்கள் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை.

முதல் வகுப்பு முடிந்தது. எப்படி float செய்வது என்பதை கற்றேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமை தான் வகுப்பு. இருந்தாலும், அடுத்த செவ்வாய் வருவதற்கு முன்னாலே மூன்று அல்லது நான்கு முறை நானாகவே நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி செய்தேன். அதன் காரணமாக மூன்றாவது வகுப்பிலேயே முதன் முதலாக 50 மீட்டர் நீந்தினேன் எந்த இடத்திலும் நிறுத்தாமல்! வாழ்க்கையில் நான் செய்த ஒருசில சாதனைகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"நீ ரொம்ப வேகமா கத்துக்கிற" என்றார் பயிற்சிவிப்பாளர்.

நான்காவது வகுப்பு முடிந்த பிறகு, வகுப்பிற்கு போவதை நிறுத்திவிட்டேன். நீச்சல் தெரிந்தவுடன் நானாகவே சென்று 10 laps அல்லது 20 laps(கிட்டதட்ட 1 km) நீந்தினேன்.உடல் எடையை குறைப்பதற்காக இந்த முயற்சி. நீச்சல் செய்தால் thigh fats குறையும்.

இப்படி ஒரு பக்கம் சென்றது.

வீட்டின் கீழ் தாளத்தில் உடற்பயிற்சி செய்ய சின்ன இடம் இருக்கிறது. காலை நேரங்களில் சென்று skipping செய்தேன். 100 முறை ஸ்கிப் செய்துவிட்டு 13 மாடி ஏறுவேன். மறுபடியும் கீழே வந்து இன்னொரு 100 முறை ஸ்கிப் செய்வேன். மறுபடியும் மாடி ஏறுவேன். இப்படி 5 முறை செய்வேன். வேர்த்து கொட்டும். கால்களிலுள்ள தசைகள் வலிக்கும். உயிர் போவது போல் இருக்கும்.

ஆனால், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான் - உடம்பை குறைக்க வேண்டும்!

உடம்பை குறைப்பது என்பது....
it is not a struggle in the body. it is the battle between the heart and the mind!

இது போதாது என்று, ஜிம்மிற்கு போக ஆரம்பித்தேன். முதன் முதலாக ஜிம் போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கே உள்ளவர்கள் நம்மை பார்ப்பார்களோ, என்ன நினைப்பார்களோ என்று பல சிந்தனைகள். அங்கு சென்று பார்த்தபிறகு ஒரு புதிய தன்னம்பிக்கை.

வயது 40, 50 இருக்கும் பெண்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக பயிற்சி செய்வதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அவர்களை பார்த்து நிறைய கற்றுகொண்டேன்.

முதன் முதலாக ஆரம்பித்த போது threadmill 10 நிமிடங்கள் நடக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். stamina பத்தாது! பத்தி நிமிடங்கள் நடந்தவுடன் உட்கார்ந்து கொள்வேன். இப்படி பயிற்சி செய்து என்னிக்கு நம்ம உடம்ப குறைப்பது என்ற சோகம்! சில சமயங்களில் சோர்ந்து நொந்து போயிவிடுவேன். ஆனால், ஏதோ ஒன்று மனதில் சொல்லும்-உன்னால் முடியும் என்று!

staminaவை முன்னேற்றி கொண்டாலே போதும்! அதற்கு தொடர்ந்து ஜிம்-மிற்கு சென்றேன்.
threadmillலில் 20 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பிறகு ஓட ஆரம்பித்தேன்.
mini-weights தூக்கினேன்.
cycling machineலில் 25 நிமிடங்கள் பயிற்சி செய்தேன்.

ஒவ்வொரு முறையும் நான் அன்று ஜிம்மில் என்ன செய்தேன், எவ்வளவு calories குறைத்தேன் என்பதை டைரியில் எழுதினேன். 100 caloriesலில் ஆரம்பித்து, உச்சகட்டமாக 1200 calories வரையிலும் சென்றுள்ளேன். அதாவது ஒரு நாளில் 1200 calories குறைப்பது என்பது கிட்டதட்ட மூன்று மணி நேர உழைப்பு!

அங்குள்ள weighing machineலில் எடையை பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும் குறைந்து கொண்டே வந்தது. சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே....

என் சூழ்நிலைக்கு ஒத்துவராத பொன்மொழி!

பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சாப்பாட்டின் அளவையும் குறைக்க வேண்டும்...

ஆனால்...

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, May 13, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-1

biggest loser நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது, பழைய நினைவுகள் என்னை தீண்டின.

2007 மே மாதம்.

காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."

அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.

2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.

கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.

அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.

வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.

நீச்சல் வகுப்பில்.....

(பகுதி 2)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

ஜஸ்ட் சும்மா(13/5/09)

காலேஜ் இருக்கும்போது, அம்புட்டு வேலை இருக்கும். ஆனா எழுதுறதுக்கு 1008 விஷயங்கள் தோணும். இப்போ லீவு தானே.. ஆனா இந்த (மர)மண்டையில ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... அது ஏன்னு தெரியல.... லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...அதான் இப்படி ஜஸ்ட் சும்மா....

ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------

biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------

1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."

அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."

நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------

குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, May 10, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-6



தற்போது...தற்போது...தற்போது.... சரி மேட்டருக்கு வரேன்.... தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர் நம்ம ஆனந்த தாண்டவன் படத்தின் ஹீரோ சித்தார்த் வேணுகோபால்!

attractive feature- தாடி, புன்னகை, கண்கள்
இவர பத்தி அதிகமா அலசி ஆராய்ந்துவிட்டேன் சும்மா அரட்டையில். ஆக, அடுத்த நபரை பத்தி பார்ப்போம்(ஓ... ஓ.... சன் டிவி டாப் டென் பாத்த பாதிப்பு..சரி ஃவிரியா வுடுங்க.

rock on படத்தை பார்க்கவும்னு என் சின்ன தம்பி வானவில் வீதி கார்த்திக் சொன்னார். ஆனா ஒன்னே ஒன்னு சொல்லவில்ல... அந்த படத்தில் எம்புட்டு அழகான பசங்க இருப்பாங்கன்னு... படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 4 வாலிபர்கள். அதுல ரெண்டு பேரு...ம்ம்ம்.... செம்ம கியூட்ட்ட்ட்ட்!

farhan aktar


Purab kohil


இவர்களுக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன். படம் செம்ம...டாப்! ரொம்ம்ப யதார்த்தமான வசனங்கள்! அப்பரம் பசங்க...சொல்லவே வேண்டாம்...அசத்து அசத்துன்னு அசத்திட்டாங்க!! rock on man!!:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, May 7, 2009

சும்மா அரட்டை-4

வெட்டியாக இருந்த நானும் என் தோழியும் அடித்த அரட்டை...(குறுந்தகவல்கள் வழி...)

தோழி: ஏய் ஆனந்த தாண்டவம் படம் பாத்தீயா? 2nd half ரொம்ப மொக்கை.அந்த ஹீரோ not bad...i like.. haha...

நான்:பாத்தேன் பாத்தேன். நல்ல கதை தான். ஆனா.. எங்கேயோ ஆரம்பிச்சு... எங்கேயோ போன மாதிரி இருக்கு.... கடைசில முடியல....செம்ம சொதப்பல்ஸ். ஆனா.. i liked that hero's dad's role. wish all fathers in the world are like that. and oh god.. that hero looking dammmnnn cute!

தோழி: ஏய் ஆமா... அவன் details கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லேன்...

நான்: ஹாஹா..24 hrs டைம் கொடு.. கண்டுபிடிச்சு சொல்றேன்.

தோழி: ஆஹா... நீ தான் என் சினிமா encyclopedia!

(கொஞ்சம் நேரம் கழித்து..)

நான்: கண்டுபிடிச்சுட்டேன்...i saw his interview online... ஏய் நம்ம ஊர் ஆளு தான்.. i thought he was a north indian fellow! அழகா தமிழ் பேசுறேன் மேன்..கோய்ம்பத்தூர். engineering படிச்சவன். சென்னையில் software engineer வேலை ஒரு வருஷமா. இப்போ படத்துல.

தோழி: அப்போ...அவனுக்கு என்ன வயசு இருக்கும்?

நான்: ம்ம்...27 ப்ளஸ்...

தோழி: so old?? am so sad...

நான்: ஏய்... 27 உனக்கு வயசு அதிகமா? 27 is still young di!

தோழி: ஹாஹா... ஆமா... அதுவும் உண்மை தான்... சரி பரவாயில்ல.. adjust பண்ணிக்கலாம். மத்த details?

நான்: மத்த டீடேள்ஸ் என்ன வேணும்? அடுத்து அவன் ஜாதகத்த தான் தேடனும்..ஹாஹா...

தோழி: ஹாஹா... கடைசி வரைக்கும் அந்த மொக்கை படத்த பாத்தது அவனுக்காக தான்!

நான்: ஏய் மச்சி...வேட்...வேட்...அவனோட இன்னொரு பேட்டி பாத்தேன்... அவன் சொன்னான்...வெயில் படம் ரிலீஸ் ஆகும்போது அவன் காலேஜ் படிச்சுகிட்டு இருந்தான்னு! அப்போ...வெயில் படம் வந்தது 2006ல. சோ...அவன் காலேஜ் 1st இயரா இருக்க முடியாது. 2nd இயராகவும் இருக்க முடியாது. இஞ்சினியர்ங் 4 வருஷம் படிப்பு. சோ...2006 அவன் ஒன்னு 3rd இயர் or 4th இயர் இருக்கும்! ஆக...அவன் 2006... 20 அல்லது 21 வயசு தான் இருக்கும்! ஆக...இப்ப அவனுக்கு 23 அல்லது 24 தான் டி இருக்கும்!!!!!!!!

தோழி: ஐயோ முடியல! ஹாஹா...அப்போ ரொம்ப நெருங்கிட்டான்! u made my day!

நான்: நெங்கிட்டானா? அட பாவி...oh my god...oh my god... he is in facebook also... go and add him!!

தோழி: இந்த நேரம் பாத்து நான் வெளியே இருக்கேனே... சரி சரி..வீட்டுக்கு போனவுடனே add பண்ணிடுறேன்:)

நான்: நம்ம வெட்டியா இருக்கோம்னு இதுலேந்தே தெரியுது! we are slacking too much...


தோழி: பசங்களுக்கு திரிஷா ஸ்ரேயான்னா...நமக்கு இந்த மாதிரி! ஒன்னும் தப்பில்ல! பரவாயில்ல... லீவுல எஞ்ஜாய் பண்ணாம அப்பரம் எப்போ?அப்படியே cycle gapல சைட் அடிப்போம்.

நான்: cycle gap தானே? நோ....எனக்கு full time job அதுவே!

தோழி: அத தான்.... நான் கொஞ்சம் decentஆ சொன்னேன் :)

முந்தைய சும்மா அரட்டைகள்

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, May 5, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-2

பகுதி 1

"எதுக்குடா அப்பரம் அவள கூப்பிட்ட.... பேச வேண்டியது தானா! சும்மா அமைதியாவே உட்கார்ந்து இருக்கீயே... எதுக்கு? நீயெல்லாம் சரியான....த்தூ...." என்று கண்ணாடியில் பார்த்து தன்னையே திட்டினான் செல்வம். ஒரு நிமிடம் கண்களை மூடி மறுபடியும் திறந்தான், பெருமூச்சு விட்டான். கண்ணாடியில் பார்த்து,

"இங்க பாரு... நீ இப்ப போற. பேசுற!" தனக்கு தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றான். அஷ்விதா புன்னகையித்தாள். உட்கார்ந்தான் செல்வம்.

"ம்ம்...நான்..ம்ம்.." இழுத்தான் செல்வம். மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்த அஷ்விதா ஆரம்பித்தாள்,

"இங்க பாரு செல்வம்.... வோட்கா விலை என்னமா ஏறிபோச்சு? கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, பாதி விலையா தான் இருந்துச்சு?"

செல்வத்திற்கு ஆச்சிரியமாக இருந்தது. எப்படி இவளுக்கு எதெல்லாம் தெரியும் என்ற குழப்பம்.

"இந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீயா?"

"நான் யோசிச்சது எப்படி உனக்கு....?" மறுபடியும் குழம்பினான்.

'உன் மனசுல ஓடுறது தான் நேரடி ஒளிப்பரப்பா உன் முகம் காட்டி கொடுத்துட்டே?" என்று சொல்லி சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"காலேஜ் முதல் வருஷம் படிச்சப்போ.. முதல் செம்மஸ்ட்டர்... எல்லாம் பரிட்சையும் ஊத்திகிச்சு. என் குரூப்ல ஒருத்திகூட பாஸ் பண்ணல்ல. ரொம்ம்ப சோகமா போச்சு." என்று வருத்தமாக பேசினாள்.

தொடர்ந்தாள், "என்ன செய்யுறதுன்னு தெரியல.... மனசே விட்டு போச்சு... யாருக்கும் தெரியாம...." என்றவள் சுற்றுமுற்றும் பார்த்தவிட்டு செல்வத்தை அருகே வர சொன்னாள், அமைதியான குரலில்,

"எல்லாரும் வோட்கா அடிச்சிட்டோம்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் கலகலப்பாக பேசியதும் உண்மையை சொன்ன விதமும் அவள் மீது இருந்த ஆசையை அதிகப்படுத்தியது.

"ஆனா.. இந்த கருமத்த எப்படி தான் குடிக்கிறாங்களோ... குடிச்ச மறுநாளே, எங்க குரூப்ல எல்லாருக்கும் வாந்தி, பேதி... மயக்கம்னு ஒரு வாரம் தவிச்சு போயிட்டாம்... ஆமா... நீ தண்ணி அடிப்பீயா?" என்று திடீரென்று கேட்டவுடன் மிரண்டுவிட்டான் செல்வம்.

மிரண்டவன்," ஐயோ... எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது. இது வரைக்கும் எந்த பரிட்சையிலும் fail ஆனது இல்ல ." என்றான். அவன் சொன்னதை கேட்டு மறுபடியும் சிரித்தாள் தனது வெண்மையான பற்கள் தெரியும்படி. சிரிக்கும்போது கண்களில் ஒரு வசீகரம் வீசியது. 'oh man, she looks so cute' என்றது செல்வத்தின் மனம். அவளின் சிரிப்பு அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, முதன் முதலாக கேள்வி கேட்டான்.

"நீ இன்னிக்கு வந்தது உங்க வீட்டுல...." என்று கேள்வியை முடிப்பதற்குள், தண்ணீரை குடித்து கொண்டிருந்தவள்,

"ஓ நோ... தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான்!" தண்ணீர் லேசாக சிந்தியது. துடைத்து கொண்டே,

"எங்க வீட்டுல அப்பரம் அவ்வளவு தான்.... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க..." என்றாள். ஆஹா பொண்ணு நம்மை போலவே தான் என்ற ஒரு எண்ணம் வந்தது.

"அப்பரம் என்ன சொல்லிட்டு வந்த?"

" mrs claire retire ஆக போறாங்க. அவங்க கடைசி நாள் ஆபிஸுல. அவங்களுக்கு farewell partyன்னு சொன்னேன்."

"யாரு அவங்க?"

"யாருக்கு தெரியும்... ஏதோ வாய்க்கு வந்த ஒரு பெயர்!" என்று சொல்லி சிரித்தாள். அவள் பேச்சு செல்வத்திற்கு ரொம்ப பிடித்து இருந்தது. இன்னும் சகஜமானான். இருவரும் நிறைய பேசினர். சாப்பாடு வந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் மேசையில் இருந்த செல்வத்தின் ஃபோன் ஒலித்தது. எடுத்து பார்த்தான் வாசுவிடமிருந்து மெசேஜ்

டேய், பரிச கொடுத்தீயா இல்லையா?

பார்த்துவிட்டு கடுப்பானான் செல்வம். பதில் எதுவும் அனுப்பவில்லை. மறுபடியும் தன்னை உசுபேத்திவிட்டானே என்ற கோபம் செல்வத்திற்கு.

"are you alright selvam?" மேசையிலிருந்த செல்வத்தின் கையின் மீது கை வைத்து கேட்டாள். அக்கணம் அவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. அந்த மாதிரி உணர்வு இதற்கு முன்னால் ஏற்பட்டதில்லை. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு. ஒரு வழியாய் சமாளித்து கொண்டவன்,

"i am ok. i am ok...." என்றான். புன்னகையித்தவள் அவள் கையை எடுத்தாள்.

'ஐயோ.. இவ்வளவு சீக்கிரம் கையை எடுத்துவிட்டாளே!" என்று அவன் மனம் ஏங்கியது.

"சரி டைம் ஆச்சு, போலாமா?" என்றாள்.

"வா... உன் வீட்டுக்கிட்ட drop பண்றேன்?" என்றான் செல்வம்.

"இல்ல இல்ல.... பரவாயில்ல. நான் பஸுல போய்டுவேன்..."

"mrs selvam இனிமேல பஸுலலாம் போக கூடாது."

புன்னகையித்தபடி அவன் பின் தொடர்ந்தாள். கார் அருமையாக உள்ளது என்பதை பற்றியும் செல்வம் நல்ல கார் ஓட்டுகிறார் என்பதை பற்றியும் பேசி கொண்டு வந்தாள். செல்வத்திற்கு சந்தோஷமாக இருந்தது. அவள் வீட்டு அருகே வந்தனர். கார் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது.

"தேங்கியூ செல்வம்.. thanks for the treat too!" என்றபடி காரிலிருந்து இறங்கி சென்றாள்.

செல்வம் பின்னாடியிலிருந்து கூப்பிட்டான் அவளை. யாரும் இல்லாத தெரு. வெளிச்சம் அதிகம் இல்லை. அவள் அருகே சென்றான்.

"என்ன செல்வம்? ஏதாச்சு சொல்லனுமா?"

"இல்ல... ஒன்னு கொடுக்கனும்?"

"என்ன?" முழித்தாள்.

"இன்னிக்கு முதன் முதலா வெளியே போயிருக்கோம்... பேசியிருக்கோம்..." சொல்ல முடியாமல் தவித்தான்.

"ம்ம்....சோ?" என்றாள்.

"பரிசு ஒன்னு கொடுக்கனும்னு ஆசைப்படுறேன்...." என்றவன் முன்னால் சற்று சாய்ந்து அவளது வலது கன்னம் அருகே தன் முகத்தை கொண்டு சென்றபோது,

"செல்வம்... what are you trying to do man?" என்று அஷ்விதாவிற்கு கோபம் வர, செல்வத்தின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள்.

கார் பயங்கரமான சடன் பிரேக்குடன் நின்றது.

"என்ன ஆச்சு செல்வம்...are you ok?" பதற்றமாய் கேட்டாள் அஷ்விதா. சுயநினைவுக்கு வந்த செல்வத்தின் முகத்தில் அதிர்ச்சி. தான் கண்டது எல்லாம் நனவு இல்லை என்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும், பயம் இன்னொரு புரம் இருந்தது.

"ஐ எம் ஓகே...." ஏதோ சமாளித்தான்.

கார் அதே போல் ஒரு மரத்திற்கு பக்கத்தில் நின்றது. தான் விடைபெற்று கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றாள். யாரும் இல்லாத அதே தெரு. வெளிச்சமும் இல்லை. செல்வம் சத்தம் போடாமல் கூப்பிட்டான்,

"அஷ்விதா...."

அஷ்விதா திரும்பி பார்த்து மீண்டும் கார் அருகே வந்தாள். செல்வமும் காரைவிட்டு இறங்கி நின்றான். அதே படபடப்பு

"அஷ்விதா... thanks."

"எதுக்கு செல்வம்?"

"இல்ல... இன்னிக்கு.. நீ வந்தது... அதான்... thanks." உளறினான் செல்வம்.

"ஏய் இதுக்கு போய்.. எதுக்குப்பா நன்றிலாம் சொல்லிகிட்டு..." புன்னகையித்தாள்.
தொடர்ந்தாள்,

"ஏ.. சுத்தமா மறுந்துட்டேன்... உனக்கு ஒரு பரிசு கொடுக்கனும்னு ஒன்னு வாங்கி வச்சு இருந்தேன்..." என்றவள் தனது கைபையில் பரிசை தேடினாள். அவள் தேடுவதை செல்வம் பார்த்து கொண்டிருந்த வேளையில்,

"இச்!" கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் அஷ்விதா.

செல்வத்திற்கு 150 அடி பூமிக்குள் போய், பிறகு வானத்திற்கு போவதுபோல் இருந்தது. கிறங்கடிக்க வைத்தது. அவனது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

*
*
*
*

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

அச்சமயம் செல்வத்தின் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பேசலாமா வேண்டாமா என்று யோசித்தாள் அஷ்விதா. ஒலி அளவுக்கு அதிகமாக இருந்ததால், அதை 'கட்' செய்தாள். மறுபடியும் கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்து பார்த்தாள், 'வாசு' என்று மின்னியது. 'கட்' செய்தாள். மறுபடியும் ஒலித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எடுத்து பேசவதற்குள் மறுமுனையில் வாசு,

"டேய் மச்சி சொல்ல மறந்துட்டேன் டா.... நீ கிஸ் கொடுக்கும்போது வெளிச்சமான ஏரியாவுல இருக்கும்போது கொடுத்து தொலைச்சிடாத...atmosphere lighting கொஞ்சம் மங்கலா இருக்கனும். இந்த கிஸ பரிசா கொடுத்து அவள் அசத்தனும்.. சரியா... என்னடா பேச்ச காணும்... ஓ ஓ.. அவ முன்னாடி உட்கார்ந்து இருக்காளா? ஓகே மச்சி.... i shall not disturb you. enjoy machi!" என்று சொல்லி முடித்தான்.

அஷ்விதாவிற்கு புரிந்தது. கைபேசியை பார்த்து புன்னகையித்தபடி அதை மேசையில் வைத்தாள்.
*
*
*
"ம், இத கொடுக்க இவ்வளவு வெட்கம்.... அதுக்கு இவ்வளவு டென்ஷனா?" செல்வத்தின் மூக்கை செல்லமாக அசைத்தாள்.

"anyway, வாசுக்கு thanks சொல்லிடு... good night" என்று சொல்லிவிட்டு சென்றாள். அவள் சொன்னது எதுவுமே செல்வம் காதுகளில் விழவில்லை. மயக்கத்திலே இருந்தான்......

*முற்றும்*

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Monday, May 4, 2009

மலர்களே மலர்களே, இது என்ன கனவா-1

அவளை தனியாக பார்த்து பேச வேண்டும் என்ற ஆவல். சந்திக்க முடியுமா என்று குறுந்தகவல் அனுப்பினான் செல்வம். ஆனால், அனுப்பி வைத்த பிறகு தான் பயம் வந்தது. அவள் தவறாக எண்ணிவிடுவாளோ, கல்யாணத்திற்கு முன் இப்படி சந்திப்பது தவறு என்ற நினைப்பாளோ என்ற பயம் கவிகொண்டது. ரொம்ப டென்ஷனாக இருந்தான் செல்வம்.

அஷ்விதாவிடமிருந்து பதில் வந்தது.

'ஒகே செல்வம், மீட் பண்ணலாம். 7pm @ taaksha point."

படித்து முடித்தவுடன் தான் உயிர் வந்தது போல் இருந்தது. குறுந்தகவலை பார்த்து புன்னகையித்தபடி தனது பாக்கேட்டில் போட்டான் கைபேசியை. சந்தோஷ ரேகைகள் செல்வம் முகத்தில் பரவ, அதை கவனித்த வாசு,

"என்னடா மச்சி, ஆபிஸ் வந்தப்ப ஒரு மாதிரியா இருந்த.. இப்ப சந்தோஷமா இருக்க... இனிக்கு பாஸ் ஆபிஸுக்கு வரலையா என்ன?" என்று பாஸின் அறையை எட்டி பார்த்தான்.

"ஒன்னுமில்ல டா, அஷ்விதாவ தனியா பார்த்து பேசனும்னு நினைச்சேன். கல்யாணத்துக்கு முன்னாடி இதலாம் வேண்டாம்னு... என்னைய தப்பா நினைச்சுடுவாளோன்னு பயந்தேன்.. ஆனா ஒகேன்னு சொல்லிட்டா டா.. அதான்...." அசடு வழிந்தான் செல்வம்.

"ஆஹா... நிச்சயதார்த்தம் பண்ணி இப்ப தான் 3 வாரம் ஆகுது... அதுக்குள்ள இப்படி போகுதா கதை? ஏன்... நிச்சயதார்த்தம் அன்னிக்கு பேசவிடலையாக்கும்? வீட்டுல தெரியுமா இன்னிக்கு மீட் பண்ண போற விஷயம்? " சிரித்தான் வாசு. மடிகணினியை திறந்து தனது இமெயிலை பார்த்து கொண்டே பதில் அளித்தான் செல்வம்,

"ம்ஹும்.... எங்க பேசுனோம்? கொஞ்சம் நேரம்.. அதுவும் 5 நிமிஷம் தான்... அவ்வளவு கூட்டம்... ஒன்னும் ஃபிரியா பேச முடியல்ல...வீட்டுக்கு? ஐயோ... எங்க அம்மா ஒரு மெகா சீரியலே ஓட்டிடுவாங்க. போககூடாது, கட்டுபாடு, கலாச்சாரம், மத்தவங்க பாத்தா என்ன நினைப்பாங்க... அது இதுன்னு சொல்லி என்னையும் சேத்து குழப்பிடுவாங்க" சொல்லிகொண்டே தேவையில்லாத இமெயில்களை டிலிட் செய்தான்.

"ஓ... அப்ப...திருட்டுத்தனம் இப்பவே ஆரம்பிச்சுட்டீயா. வெரி குட். இப்படி தான் எல்லாம் ஆரம்பிக்கும். எஞ்ஜாய் மச்சி! அப்பரம்.. என்ன gift கொடுக்க போற?" வினாவினான் வாசு.

"யாருக்கு?" முழித்தபடி வாசுவின் முகத்தை பார்த்தேன் செல்வம்.

"டேய்.. இன்னிக்கு அஷ்விதாவ முதன் முதல வெளியே கூப்பிட்டு இருக்க...அவள பாக்க போற... பரிசு ஒன்னும் வாங்கி வைக்கலையா?" வாசு பதில் அளித்தான்.

"டேய்... சுத்தமா மறந்துட்டேண்டா... இப்ப என்ன செய்ய?" மறுபடியும் டென்ஷன் ரேகைகள் அவன் முகத்தில் மின்னல்கள் போல் தோன்றியது. தொடர்ந்தான் செல்வம்,

"flower bouquet வாங்கிட்டு போவா? how about chocolates... or.... why not just a simple card?" செல்வத்தின் உளறல்களை பார்த்து ரசித்தான் வாசு.

"ஓய்... நிறுத்து. என்னது சாக்கெலட்டா? .. இன்னிக்கு சுதந்திர தினமா என்ன? டேய் மச்சி... இந்த பூ கொடுக்குறது... கார்ட் கொடுக்குறது எல்லாம் ஒன்னாவது போற பசங்களே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம ரேஞ்சுக்கு... சூப்பரா ஒன்னு செய்யனும் மேன்?" உட்கார்ந்து இருந்த செல்வத்தின் தோளை தட்டினான்.

"நீயே சொல்லேன்...?"

"ஒரு நிமிஷ வேட் பண்ணு.." என்று சொல்லிவிட்டு வாசு தனது கேபினுக்குள் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வந்தான்.

செல்வம் நெற்றியில் கைவைத்து என்ன பரிசு வாங்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தபோது, புத்தகத்தை செல்வம் மேசையில் வைத்தான். "girls & fantasies" என்று எழுதியிருந்தது.

எதிரில் நின்று கொண்டிருந்த வாசு, "பக்கம் 27க்கு திருப்பு, அதுல மூணாவது paragraphஅ படி." கடகடவென்று படித்த செல்வம்,

"ஓ மை காட்.... what nonsense is this vasu? bullshit!" புத்தகத்தை மூடி வாசுவின் கையிலேயே திணித்தான்.

"ஏய்... கூல் டவுன் கூல் டவுன். எதுக்கு இந்த ஓவர் ரியேக்சன்? அதுல போட்டுருக்க மாதிரி செய்... the best unforgettable gift! நானும் இப்படி செஞ்சு தான் என் மனைவிய impress பண்ணேன்!" வாய்விட்டு சிரித்தான் வாசு.

"ஏய்.... நான் யாருக்கும் தெரியாம அவள பாக்குறதே அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ... அதுல... இப்படி செஞ்சா? நல்ல ஐடியா கொடுத்த போ... கல்யாணம் ஆகாமலே எனக்கு divorce வாங்கி கொடுத்துடுவ போல...." சலித்து கொண்டான் செல்வம்.
செல்வம் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியை இழுத்து அவன் எதிரே உட்கார்ந்தான் வாசு. மெல்லிய குரலில் வாசு, "it's just a kiss. what's wrong? இது தான் மச்சி, தி பெஸ்ட்டா இருக்க முடியும்?"

"என்ன ராங்கா? போடா போங்கு!!? நீயும் உன் ஐடியாவும்.... நான் எதாச்சும் மல்லிப்பூவோ அல்வாவோ வாங்கிட்டு போறேன். உன் ஐடியா ஒன்னும் வேணாம்?" மறுபடியும் தனது பார்வையை மேசையில் இருந்த கோப்புகளின் மீது திருப்பினான் செல்வம்.

அவனை தன் பக்கம் இழுத்தான் வாசு.

"என்னது மல்லிப்பூவும் அல்வாவுமா?? ஹாஹாஹா...." சத்தம் போட்டு சிரித்தான் வாசு. தொடர்ந்தான் தனது நக்கல் பேச்சை,

"டேய்... அதலாம் சின்ன வீடு வச்சுருக்குறவன் வாங்கிட்டு போற ஐட்டம் டா... ஹாஹா.... நீ மட்டும் அத அஷ்விதாகிட்ட கொடுத்தே... அவ்வளவு தான் உனக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு confirm பண்ணிடுவா... ஹாஹா.."

"ஐயோ.... என்னைய என்னடா செய்ய சொல்ற?

"just listen to me. sweet decent கிஸுக்கு நாலு இடம் இருக்கு. கை,நெத்தி, கன்னம்,லிப்ஸ். கையில....நோ நோ.. அது சரிபட்டு வராது... ஏதோ சின்ன புள்ளத்தனமா இருக்கும். நெத்தில கொடுக்குறது.... அது after marriage! லிப்ஸ்....ம்ம்ம்....." யோசித்தவாறு செல்வத்தை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்தான்.

வாசு, "ஹாஹா... லிப்ஸ்...ம்ஹும்... நீ ரொம்ப பயந்துடுவே! so, cheek is the only option."

தொடர்ந்தான், "rightல கொடு...அதான் girls' psychology படி தி பெஸ்ட்."

"டேய்... எனக்கு பயமா இருக்குடா?" மழையில் நனைந்து கோழி போல் உதறினான் செல்வம்.

"பயமா இருந்தா இப்பவே practice பண்ணிக்கோ... நம்ம கிளார்க் அஞ்சல ஆண்ட்டிகிட்ட!" என்று கிண்டல் செய்தான்.

"டேய்... ஏண்டா நீ வேற!" ஆழ்ந்த சிந்தனையில் செல்வம்.

"it is not merely an innocent display of affection. It is a display of passion machi! இங்க பாரு...கிஸ் பண்ணும்போது, நமக்குள்ள இருக்கும் neurotransmitters ரிலீஸ் ஆகி மூளைக்கு போகும். அப்படி போகும்போது, நமக்குள்ள ஒரு புத்துணர்ச்சி வரும். அந்த புத்துணர்ச்சி 'இவன் என்னுடையவன்; இவனுக்கு என்னை பிடிச்சுருக்கு' அப்படின்னு அவள் மூளைக்கு மெசேஜ் போகும். இந்த biological processல உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல chemistry work out ஆகும். அப்படி ஆச்சுன்னா...for every action, there is an equal and opposite reaction நடக்கும். அஷ்விதாவும் மறுபடியும் உனக்கு கொடுப்பா. அதுக்கு வாய்ப்பு இருக்கும். இது physics! இப்படி biology, chemistry, physicsனு.... டேய் மச்சி, எஞ்ஜாய் டா!" சிரிக்க ஆரம்பித்தான் வாசு.

"இந்த ஆர்வத்த நீ உன் வேலையில காட்டியிருந்தே... உனக்கு எப்போவோ promotion கொடுத்து இருப்பாங்க?" வாசுவின் lectureயை கேட்டவிட்டு சொன்னான் செல்வம்.

"அட போ டா... வேலை கிடக்குது. எனக்கு என் நண்பன் வாழ்க்கை தான் முக்கியம்." புன்னகையித்தான் வாசு. அச்சமயம் ஆபிஸுக்குள் பாஸ் நுழைந்ததால், வாசு தனது கேபினுக்குள் ஓடுவதற்குள் செல்வத்தின் காது அருகே, "டேய் நான் சொன்ன மாதிரி செய். ஆல் தி பெஸ்ட்"

அன்று முழுவதும் செல்வம் சற்று குழப்பத்துடன் இருந்தான். மாலை 6 மணி ஆனது. வாசு வீட்டிற்கு செல்வதற்கு முன் செல்வத்திடம் "டேய் மச்சி, results என்னான்னு இன்னிக்கு நைட் ஃபோன் பண்ணி சொல்லு!" கண் சிமிட்டியபடி கண்ணாடி கதவை திறந்து வீட்டிற்கு புறப்பட்டான்.

செல்வம் 6.45pm சொன்ன இடத்தில் காத்திருந்தான். கொஞ்சம் பயம், கொஞ்சம் பரபரப்பு,கொஞ்சம் சந்தோஷம், வெளியே காட்டி கொள்ளாமல் இருந்த அதிகபடியான வெட்கம் என்று பல உணர்ச்சிகளால் செல்வம் நின்று கொண்டிருந்தான். தனக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வருவாள் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.

அஷ்விதா வந்தாள். பிங் நிறத்தில் ஒரு சட்டை, சாதாரண ஜீன்ஸில். தனது கற்பனை நனவாகவில்லை என்று சற்று ஏமாற்றம் அடைந்தான் செல்வம்.

கையசைத்தபடி அவனை நோக்கி வந்தாள் அஷ்விதா. அவன் முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை கண்டு கொண்டவள் புன்னகையித்தபடி,

"என்ன ஆச்சு செல்வம்? யாரடி நீ மோகினி படத்துல நயன்தாரா introduction scene மாதிரி...வெள்ளை சுடிதார்ல வருவேன்னு நினைச்சீங்களா..நினைச்சீயா?" என்றாள்.

அவள் வெளிப்படையாக பேசியது அவனின் ஏமாற்றத்தை போக்கியது. புன்னகையித்தான். ஒரு உற்சாகம் பிறந்தது. அவள் இயல்பாய் 'நினைச்சீங்களா' என்பதிலிருந்து 'நினைச்சீயா' என்று மாற்றியது, உரிமை எடுத்து கொண்டது செல்வத்திற்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி குறைந்ததுபோல் உணர்ந்தான்.

தொண்டைக்குள் வார்த்தைகள் பிறந்து தவிழ ஆரம்பித்தது செல்வத்திற்கு, "ஹாய்.. ஓ அப்படி ஒன்னுமில்ல!" எச்சில் முழுங்கினான்.

"சரி செல்வம், இப்ப எங்க போகலாம்? this place is really big ah?" என்று சுற்றும்முற்றும் பார்த்தாள் அஷ்விதா. அவள் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தது அவன் வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளுக்கு புதிதாய் மீசை முளைத்ததுபோல் உணர்ந்தான்.

"எங்காச்சும்...உன் விருப்பம்?" அவன் பதில் அளித்தான்.

"சரி... இங்க நிறைய restuarants இருக்கு. அங்க போவோம்?" என்று சொல்லியபடி நகர்ந்தார்கள்.

"பரிச கொடுக்க மறந்துடாத!" மனசாட்சிக்கு பதில் வாசுவின் குரல்தான் செல்வத்துக்குள் ஒலித்தது. "சரி சரி.." என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான் செல்வம்.

தம்ரானா நார்த் இந்தியன் உணவகத்திற்குள் சென்றனர். கஸல் இசை ஒலிக்க, வெளிச்சம் அதிகமாய் இல்லாமல், நிறைய இந்திய ஓவியங்கள், சிற்பங்கள், அலங்காரங்கள் என உணவகம் ஒரு ரம்மியமான சூழலில் இருந்தது. ஓர் இடத்தில் உட்கார்ந்தார்கள்.

"நீ என்ன சாப்பிடுற?" அஷ்விதா கேட்டாள்.

மெனு கார்ட்டை பார்த்தபடி செல்வம்,

"ம்ம்... cheese naan with butter masala chicken."

"nice choice.." என்று புன்னகையித்தாள்.

"ஆம். உன்னைய மாதிரியே." என்று சொல்ல தைரியம் இல்லாமல் ஒரு புன்னகை மட்டும் வீசினான்.

தனது ஆர்டரை கொடுத்தாள் அஷ்விதா,

"plain naan with chilli prawns.... and one glass of lime juice....mm..2 glasses please." என்று கண்களாலே செல்வத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு இரண்டு கிளாஸ் ஆர்டர் செய்தாள்.

கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். அஷ்விதா என்ன செய்வது என்று தெரியாமல் மெனு கார்ட்டை பார்த்து கொண்டிருந்தாள். செல்வத்திற்கு..ம்ஹும்ம்... சொல்லவே தேவையில்லை. நிறைய பேச வேண்டும் என்று நினைத்து வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தனது கைபேசியை மேசையில் வைத்துவிட்டு,

"excuse me..." என்றுபடி கழிவறைக்கு சென்றான் செல்வம்.

(பகுதி 2)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, April 30, 2009

இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கலகம் தானடா!

இருவரும் threadmillலில் ஓடினர் 20 நிமிடங்களுக்கு. சனிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது உடற்பயிற்சி மையத்தில். பெண்கள் ஆண்கள் என நிறைய பேர் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் பிரேக் எடுத்து கொள்வதற்காக ஷாலினியும் ரீனாவும் அங்கிருந்த சோபாவில் ஓய்வு எடுத்தனர். கையில் இருந்த '100- plus energy drink' பாட்டிலை ஷாலினியிடம் தூக்கிபோட்டாள் ரீனா.

ரீனா தனக்கும் ஒரு பாட்டிலை எடுத்து திறந்து குடித்தாள். அவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து ஆண்கள் பயிற்சி செய்வதை நன்கு பார்க்கலாம். ரீனா பார்த்து வியப்படைந்தாள். "oh god... just look at him. he's so cuteee..." ரீனா நல்லா சைட் அடித்தாள்.

ஷாலினிக்கு இந்த சைட் அடிப்பது, ஆண்களை பற்றி பேசுவது-எதுவுமே பிடிக்காது என்பதால் ரீனா சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை.

"அங்க பாரேன்...." ரீனா குஷியாகி ஷாலினியின் மடியை தட்டினாள்.

"ஏய் ரீனா... stop your nonsense. behave yourself!" அதட்டினாள் ஷாலினி.

"ஏய்.. பாட்டி மாதிரி பேசாத. we are 23 only. இப்ப சைட் அடிக்காம அப்பரம் எப்போ?" மீண்டும் தன் பார்வையை ஆண்கள் உடற்பயிற்சி இடத்திற்கு திருப்பினாள்.

"நான் கிளம்புறேன்." வெறுப்புடன் ஷாலினி புறப்படும்போது, ரீனா அவள் கையை வலுகட்டாயமாக பிடித்து மறுபடியும் சோபாவில் உட்கார வைத்தாள்.

"ஏய் என்ன ஆச்சு? ஏன் உனக்கு இதலாம் பிடிக்கறது இல்ல.... எனக்கு தெரிஞ்சு.... ரொம்ப காலமா இப்படியே இருக்கீயே ஏன்? you mean you don't like guys?" வினாவினாள் ரீனா. பதில் எதுவும் பேசாமல் கீழே படத்து push-up செய்ய ஆரம்பித்தாள்.

"ஓய் ஷாலு... i am talking to you." தனக்கு பதில் அள